முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு நடிகர் அமிர்கானுக்கு பிரதமர் நன்றி

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பிளாஸ்டிக் தடை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகர் அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியே மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.  அவர் கடந்த 25-ம் தேதி பேசும் போது, இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகி கொண்டிருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதியில் வரும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர். சேவை செய்யும் உணர்வானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது. அவரது 150-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினையும் நாம் தொடங்க வேண்டும். இந்த வருடம் காந்தி ஜெயந்தியை, அன்னை இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன் என கூறினார்.

இதற்கு பாலிவுட் நடிகர் அமிர்கான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் பிரதமர் மோடியின் திட்டம் நாம் அனைவரும் தீவிரமாக ஆதரிக்க வேண்டிய முயற்சியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அமிர்கானின் இந்த டுவிட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமிர்கானுக்கு நன்றி. உங்களுடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இத்திட்டத்தை வலுப்படுத்த மற்றவர்களுக்கும் ஊக்குவிக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து