எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்கள் வெளிநாடு சென்றார்கள் என்றும் நான் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- உங்கள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?
பதில்:- தொழில் முதலீட்டாளர்கள், நம்முடைய தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கின்றார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் தங்கி தொழில் செய்பவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களெல்லாம், தமிழகத்திற்கு வந்து, என்னைச் சந்தித்து, தொழில் துவங்க ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். நீண்ட நாட்களாக தமிழகத்திலிருந்து எந்தவொரு முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அந்தக் குறைபாட்டை இப்பொழுது தீர்த்து வைத்திருக்கின்றோம்.
கேள்வி:- கோட், சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம், நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வந்திருக்கின்றீர்களே?
பதில்:- வெளிநாட்டிற்கு நாம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறோம். அயல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திக்கும்பொழுது, அவர்கள் உடையில் இருந்தால்தான் அது சரியாக இருக்கும். நம்முடைய விருப்பத்தைத் தெரிவிக்காமல் அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
கேள்வி:- இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
பதில்:- இவையெல்லாம் குறுகிய காலத்திலே நடைமுறைக்கு வர இருக்கின்றன. திறமையான தொழிலதிபர்களுடன் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முதலீட்டாளர்கள் வர இருக்கிறார்கள்.
கேள்வி:- வெளிநாடு சென்று அதிக அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ச்சியாக அமைச்சர்கள், முதலமைச்சர் மீது விமர்சனம் முன் வைத்து வருகிறாரே?
பதில்:- நான் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக் குரல் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார். முதலமைச்சர் மட்டுமல்லாமல், மற்ற அமைச்சர்களும் அவரவர் துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்கள். வனத்துறை அமைச்சர் வண்டலூர் பூங்காவை நவீனப்படுத்துவதற்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய அளவிற்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றை நவீன முறையில் புகுத்தியிருப்பது போன்று, தமிழகத்திலும் புகுத்த வேண்டும். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருக்கின்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். சிறிய நாடாக இருக்கக் கூடிய துபாய் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, அனைத்து வளங்களும் இருக்கின்ற நம்முடைய நாட்டிலும் சுற்றுலாவை மேம்படுத்தலாம், இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும், வேலைவாய்ப்புகள் பெருகும். ஆகவே, சுற்றுலாப் பயணிகள் ஒரு நாட்டுக்கு வந்து சென்று, அந்நாட்டிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர்கள் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிப்பார்கள். இது, தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கான அடித்தளமாக அமையும். துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் அந்த நாடுகளின் சிறப்புக்களை இங்கு வந்து சொல்வதுபோல், இந்தியாவிற்கு வருபவர்களும் அது போல் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் வெளிநாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
கேள்வி:- பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணைக்கு நேரில் சென்றீர்கள், அந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:- மிகச் சிறப்பாக இருந்தது. ஒரே இடத்தில் 3,000 பசுக்கள் வளர்க்கிறார்கள், ஒரு பசு ஒரு நாளைக்கு சுமார் 70 லிட்டர் பால் கொடுக்கிறது. குறைந்த ஆட்களைக் கொண்டு நவீன முறையில் அதைப் பராமரிக்கிறார்கள். தமிழ்நாட்டில், பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், அதாவது ஒரு மாவட்டத்தில் 70,000 லிட்டர் முதல் 80,000 லிட்டர் வரை பால் சேகரிக்கிறோம். ஆனால் அங்கு ஒரே இடத்தில் ஒரு பண்ணையில் 1,20,000 லிட்டர் பால் கறக்கிறார்கள். தமிழகத்தின் வேளாண் பெருமக்களின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. இங்கு இருக்கும் கால்நடைகள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் பால் மட்டும்தான் கறக்கிறது, ஆனால், அங்கு இருக்கும் பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கறக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமாக, அவர்கள் கூடுதல் வருமானம் பெறமுடியும். எனவே, அந்த தொழில்நுட்பத்தை கண்டறியச் சென்றோம். அங்கிருக்கின்ற கால்நடைகளின் ஒவ்வொரு கன்றுக்கும் ஒரு பிளாஸ்டிக் கூண்டு கட்டி, ஷெட் அமைத்து, படிப்படியாக தேவையான தட்பவெப்ப நிலையை உருவாக்கி, தீவனம் கொடுத்து, குழந்தைகளைப் போல் வளர்க்கின்றார்கள். இவற்றையெல்லாம் நேரடியாகச் சென்று அறிந்து அதனை தமிழ்நாட்டிலும் பயன்படுத்துகின்ற பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
கேள்வி:- 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரு தமிழக முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள், அங்கு வாழக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு உங்களை வரவேற்றார்கள்?
பதில்:- அனைவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்துகூட நியூயார்க்கில் வரவேற்றார்கள். அங்கு உழைப்பதற்கென்றே தமிழர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன், அந்த அளவிற்கு உழைக்கிறார்கள், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், பல தொழிலதிபர்கள் என்னை சந்திக்கின்றபொழுது, தமிழகத்தில் ஐ.டி. பார்க் அமைப்பதற்கு நாங்கள் முன்வருகிறோம் என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள். அமெரிக்காவின் IT field-ல் ஏறக்குறைய 35 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த