எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை வந்த சீன அதிபருக்கு விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை, தப்பாட்டம், செண்டை மேளம், பரத நாட்டிய கலைஞர்கள் வழிநெடுக பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் அங்கு பிரதமர் மோடியுடன் கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார். மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சீன அதிபர் வருகை
அமைதி நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங், சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து நேற்று பிற்பகல் 2-15 மணியளவில் சென்னை வந்தார். பிரத்யேகமாக ஒரு விமானமும் அடுத்து ஒரு விமானமும் வந்தது, பிரத்யேக விமானத்தில் சீன அதிபர் ஜின்பிங் வந்தார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. மயிலை கபாலீஸ்வரர் கோவில் குருக்களின் பூர்ண கும்ப மரியாதையுடன் சீன அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபருக்கு தமிழ்ப்பண்பாட்டின்படி ஒயிலாட்டம், மயிலாட்டம், செண்டை மேளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது,. நாட்டுப்புற கலைஞர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து சீன அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் பின்னர் அவர் குண்டு துளைக்காத கார் மூலம் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு புறப்பட்டார். அவருக்கு வழியெங்கும் இந்திய சீன கொடிகளை ஏந்தி மாணவர்கள் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பளித்தனர், மாணவர்களை பார்த்து அவர் மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
சீன அதிபர் ஜின்பிங் வருகையைத்தொடர்ந்து பழைய விமான நிலையத்தில் ஐந்தாம் நுழைவாயிலில் வாழைப்பழம் மற்றும் காய்கனிகளுடன் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. சீன அதிபருக்கு விமான நிலையத்தில் இருந்து 34 இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாலை 4 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங், சென்னை கிண்டி சோழா கிராண்ட் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக தவில் கலைஞர்கள், தப்பாட்டம், நடனத்துடன் மாணவர்கள் பொதுமக்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஆங்காங்கே சீன அதிபரை வரவேற்கும் வகையில் வாழைமரத் தோரணங்களும், கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
விழாக்கோலத்தில் மாமல்லபுரம்
சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டிருந்தது, மாமல்லபுரம் சிற்பங்கள் மின்னொளியில் ஜொலித்தன. இதற்கிடையே மாமல்லபுரத்தில் சீன அதிபரை அர்ச்சுனன் தபசு அருகே பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் அருகருகே நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். தமி்ழ்பாரம்பரியத்துடன் பிரதமர் மோடி வெள்ளை வேட்டி துண்டுடன் காணப்பட்டார். இருதலைவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே வந்தனர். இருவரும் நடந்தே அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் கடற்கரை கோயில் , பீமர் ரதம், ஆகிய இடங்களில் சிற்பங்களை கண்டு ரசித்தனர், மாமல்லபுரத்தின் சிற்பங்கள் சிறப்பு குறித்து பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விரிவாக விளக்கினார். ஐந்து ரதம் அருகே இருதலைவர்களும் நாற்காலிகளில் அமர்ந்து அளவளாவினர். அங்கு அவர்களுக்கு மாமல்லபுரத்தின் இளநீர் பரிமாறப்பட்டது தலைவர்கள் அதனை சுவைத்தனர். மாமல்லபுரத்தில் பல்வேறு சிற்பங்களை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சுற்றி பார்த்தனர். வெண்ணெய் உருண்டை பாறையை பார்த்து சீன அதிபர் ஜிஜின்பிங் வியந்து போனார். அதே போல் அங்குள்ள சிற்பங்களையும் பார்த்து சீன அதிபர் மலைத்துப் போனார். பிறகு கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் ரசித்து பார்த்தனர்.
முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தார், அவரை விமானநிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய செயலாளர் எச்.ராஜா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சீன அதிபரின் வருகையால் மாமல்லபுரம் நகரமே களைகட்டி காணப்பட்டது. இன்று கோவளத்தில் இரு தலைவர்களும் பேச்சு நடத்துகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.