எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதாவின் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. 288 இடங்களைக் கொண்ட மகராஷ்டிராவில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் 90 இடங்களை கொண்ட அரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்தை பெற முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பா.ஜனதா கடந்த முறை 47 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் தற்போது 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாரதிய ஜனதாவால் இந்த முறை எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது. அரியானாவில் கடந்த முறை 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் இந்த தடவை 31 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவுக்கு வலுவான சவாலை கொடுத்துள்ளது. அதுபோல தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்திய தேசிய லோக் தளம் 1, அரியானா லோக் கித் கட்சி 1 மற்றும் 7 சுயேட்சைகள் ஆகிய 9 பேர் வெற்றி பெற்றதால் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. என்றாலும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை பாரதிய ஜனதா தற்போது தொடங்கி விட்டது.
அரியானாவில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தும் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அமித்ஷாவிடம் பா.ஜனதா பாராளுமன்ற குழு ஏற்கனவே வழங்கி இருந்தது. இதனால் அரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நிலையிலேயே சுயேட்சைகளின் ஆதரவை பெற அமித்ஷா உத்தரவிட்டார். அதோடு அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரையும் டெல்லிக்கு அழைத்து சில யோசனைகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரியானாவில் வெற்றி பெற்றுள்ள 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் லோக் தளம், அரியானா லோக்கித் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என 9 எம்.எல்ஏ.க்களின் ஆதரவை திரட்டும் அதிரடி நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா ஈடுபட்டது. பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்கள் குழுக்களாக பிரிந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தங்கள் பக்கம் இழுத்தனர்.
பா.ஜனதா தலைவர்களின் பேச்சுவார்த்தையால் கட்டார் தலைமையில் ஆட்சி அமைக்க சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நயன்பால் ரவத், ரஞ்சித்சிங், சோம்வீர் சங்வான், பால்ராஜ் குண்டு ஆகிய 4 பேரும் உடனடியாக சம்மதித்தனர். இவர்கள் 4 பேரும் பாரதிய ஜனதாவில் இருந்தவர்கள். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் இந்த 4 பேரையும் தங்கள் பக்கம் வளைப்பதற்கு பா.ஜ.க. தலைவர்களால் மிக எளிதாகி விட்டது. அதுபோல மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராகேஷ் தவுதாபாத் என்பவரையும் பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இந்த 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே தேவிலாலின் இளைய மகனும், லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரஞ்சித்சிங்கிடமும் பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அதுபோல அரியானா லோக்கித் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கோபால் கண்ட் என்பவரிடமும் பா.ஜக. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அவர்கள் இருவரும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அவர்களை சிர்சா பாராளுமன்ற எம்.பி. சுனிதா தனி விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ரஞ்சித்சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். காங்கிரஸ் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரஸ் பக்கம் செல்ல விரும்பாத அவர் உடனடியாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.