எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் காஞ்சிபுரத்தில் சிக்கியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து போலீசார் துப்பு துலங்கி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் காஞ்சிபுரத்தில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகளை சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து செல்போன் கடைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் இருந்து சிம்கார்டுகளை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதே போல மேலும் 2 கடைகளிலும் சிம்கார்டுகளை பயங்கரவாதிகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகளை சப்ளை செய்தது தொடர்பாக கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்கள் 7 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து கியூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் செல்போன் கடைகளில் இருந்து பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை போலி முகவரியை கொடுத்து வாங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருந்து சப்-இன்ஸ் பெக்டரை கொலை செய்த நிலையில் அவரது கூட்டாளிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் பிடிபட்டனர். இவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்ததாக பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பிடிபட்டனர். இதன் பின்னர் பெங்களூரில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரையில் 10 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன்செரீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி சப்-இன்ஸ் பெக்டர் வில்சனை கொலை செய்து விட்டு பயங்கரவாதிகள் இருவரும் கேரளா வழியாக பெங்களூருக்கு தப்பி சென்றுள்ளனர். பெங்களூர் சென்றதும் அங்கு சிவாஜி நகரில் வசித்து வரும் உசேன்செரீப் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதே போல பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் மற்றவர்களும் இவரது வீட்டிலேயே பதுங்கி இருந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாட்சா, முகமது மன்சூர்கான் இருவருடன் உசேன்செரீப்பும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மூன்று பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 பயங்கரவாதிகளும் இன்று போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. இதன் பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்பு பற்றியும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.