எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தையும் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படையில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அமைச்சர் தங்கமணி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ.30 லட்சம் மதிப்பில் குமாரபாளையம் அம்மா உணவகத்தின் விரிவாக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும், ஆவத்திப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை அடிக்கல் நாட்டியும் அவர் தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து வெப்படையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின இணைப்பு பெற்றவர்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதாக, ஒரு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது தவறான தகவலாகும். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த இலவச மின்சாரத் திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தான் தமிழக முதலமைச்சரின் எண்ணமாகும். மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய மின் திருத்தச் சட்டத்தில் இலவச மின்சாரம் பாதிகப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் இலவச மின்சாரத்தில் எந்தவிதத்திலும் ரத்து செய்யக் கூடாது என்பது தான் தமிழக அரசின் கொள்கையாகும். ஏற்கனவே விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் மட்டும் மின் மீட்டர் பொருத்தப்பட்டது. அதையும் தற்பொழுது முதலமைச்சர் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எனவே பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பதட்டத்தை அந்த தனியார் தொலைக்காட்சி ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மின்மாற்றியில் லோடு திறன் இருந்தால் மட்டுமே, ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக மின்மோட்டாரின் குதிரை சக்தித் திறன் அதிகரிக்க மின்வாரியம் மனுக்களை பெற்று வருகிறது. ஆழமான நீர்மட்டம் கொண்ட கிணற்றில் இருந்து அதிக குதிரைத்திறன் சக்தியுள்ள மின் மோட்டாரை பயன்படுத்த ஹெச்.பி ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் மட்டுமே செயல்படுத்தப்படும். வருகின்ற ஜூன் மாதம் 30-ம் தேதி வரை விவசாயிகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளிக்கலாம். இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கட்டணம் பெறுவது கிடையாது. ஆனால், இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி டெபாசிட் கட்டணம் பெறுவதுபோல தவறான தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒரு மின் இணைப்புக்கு மின்சாரம் அளிக்க மின்வாரியத்திற்கு பல லட்சங்கள் செலவு ஆகிறது. இருந்தபோதிலும், தமிழக அரசு, விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராது.
மாநில அரசின் உரிமையை எந்த நேரத்திலும் முதல்வர் விட்டுக் கொடுக்க மாட்டார். இலவச மின்திட்டத்தில் எந்த சமரசமும் கிடையாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவது ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரந்து வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள எந்த விவசாயிகளும் இலவச மின்சாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை. மின்வாரியத்தில், கேங்மேன் தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, சட்டசபையில் அறிவித்தபடி, மேலும் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதிகளில் நூற்பாலைகள் அதிகம் உள்ளதால் மின்சாரத் தேவை, பயன்பாடு அதிகமாக உள்ளது. நீண்டநாள் கோரிக்கையாக இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் மேட்டூர் அல்லது சங்ககிரி சென்று சேவைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொதுமக்களுக்கு தற்போது பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் இந்த அலுவலகங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது மூலம் அவர்களுக்கு மின்சார சேவைகள் உடனடியாக கிடைக்கும். காலதாமதமின்றி இப்பணிகள் நடத்தி முடிக்க முடியும். இந்த செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகள் பயன்பெறும். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசு என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆகும். மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகள் சார்பிலும், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களை சந்தித்து கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியும் கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்திக்காமல் கொரோனா பணிகள் குறித்து தவறான தகவலை அளித்து வருகிறார். மக்கள் பிரதிநிதி மக்கள் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டுமே தவிர இதுபோன்ற தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது. பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக முதல்வர் பணிகளில் முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நேரத்தில் அரசியல் செய்வதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சார்ந்தவர்கள் சுமத்தி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்த நிகழ்சிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் வரத. சந்திரசேகரன், மேட்டூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.