முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : தடையை மீறி பேரணி சென்ற கே.எஸ்.அழகிரி கைது

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

தேனி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி பேரணி சென்ற கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் வேளாண்மை சந்தைகளில் தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. விவசாயத்துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. 

ஆனால் இந்த மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்தால் அவை விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று கூறி அவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து