எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு, செக்காணூரணியில் வைத்து தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியில் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அருள்மிகு.மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரசாதம் வழங்கி எழுச்சிமிகு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடி தங்களது இன்னுயிரை ஈந்து வீரமரணமடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை அரசு விழா நேற்று திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்று தமிழக அரசின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திடுவதற்காக திருப்பத்தூர் சென்றிடும் வழியில் தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று காலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செக்காணூரணி பகுதிக்கு வருகை புரிந்தார்.அப்போது தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து துணை முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புத்தகம் கொடுத்து அன்புடன் வரவேற்றார்.
பின்னர் மதுரை அருள்மிகு.மீனாட்சியம்மன் திருக்கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரம் முழங்கிட தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்து கோவில் பிரசாதம் வழங்கினார்கள்.பிறகு செக்காணூரணி பகுதி கோவில் பூசாரிகள் சார்பில் துணை முதல்வருக்கு ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு பூரண கும்பமரியாதை செய்தனர்.இதனை தொடர்ந்து செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று கும்பங்களை கையில் ஏந்தியபடி வெற்றிக் குலவையிட்டு துணை முதல்வருக்கு எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.இதையடுத்து கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேவர் சிலை பகுதியில் திரண்டு வந்து மலர்கொத்து கொடுத்தும்,சால்வைகள் கொடுத்தும் துணை முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எழுச்சிமிகு வரவேற்பு நிகழ்ச்சியினை கண்டு மனம் நெகிழ்ந்த தமிழக துணை முதலமைச்சர்,கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு காரிலேறி திருப்பத்தூரில் நடைபெறுகின்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல்,மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன்,மாவட்ட துணை,இணைச் செயலாளர்கள் பஞ்சம்மாள்,பஞ்சவர்ணம்,பொருளாளர் திருப்பதி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் தமிழழகன்,மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சதீஷ்சண்முகம்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர்,மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் சிங்கராஜபாண்டியன்,மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பால்பாண்டி,மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜ்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருமங்கலம் அன்பழகன்,கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ராமசாமி,சேடபட்டி பிச்சைராஜன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா,அலங்கை ரவிச்சந்திரன்,
யூனியன் சேர்மன்கள் லதாஜெகன்,மீனாட்சி மகாலிங்கம்,சண்முகப்பிரியா பாவடியான்,துணை சேர்மன்கள் வளர்மதி அன்பழகன்,கலையரசி கண்ணன், முனியம்மாள், முன்னாள் துணை சேர்மன்கள் கண்ணன்,பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன், ஐ.டி.விங் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மதுசூதனன்,இணைச் செயலாளர்கள் ஜெய.சி. செல்வகுமரன்,கீதாலெட்சுமி, ஆனந்த்,கார்த்திக்,மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்பரசன், ராம்குமார், பசும்பொன்ராஜன், பிரபு, சிவபாலபாண்டியன், பொருளாளர் நவநீதகண்ணன், திருமங்கலம் ஒன்றிய ஐ.டி.விங் செயலாளர் விவேக், நகர் செயலாளர் விஜயகுமார், திருமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார், சுமதிசாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ஆண்டிச்சாமி, சிவபிரியா, லட்சுமி, சஞ்சய்காந்தி, வாகை ஆண்டிச்சாமி, கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், துரைப்பாண்டி,ராஜசேகர் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி, ஆலம்பட்டி ஜெகன்,செக்காணுரணி பஞ்சாயத்து தலைவர் நர்மதா கபிகாசிமாயன், முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், வெல்டிங் முருகன், கப்பலூர் தீபாஆறுமுகம், ராஜாமணி, பேரவை ஜி.பாண்டி, சிவகுமார், ராஜாமுகமது, ஆனந்த், இளைஞரணி பொன்னமங்கலம் ஜெயமணி,பிரபு,பி.ஆர்.சி.அழகர்சாமி,தளபதிசெல்வா, புங்கங்குளம் ஜெயராமன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நகர,ஒன்றிய,பேரூர் மற்றும் கிளை கழகநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.