எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள் என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், துபாயில் கடந்த செவ்வாய் கிழமை இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை சாய்த்து 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை உச்சிமுகர்ந்தது. அந்த அணி ஏற்கனவே 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளிலும் ரோகித் சர்மா தலைமையில் மகுடம் சூடியிருந்தது. இறுதி ஆட்டத்தில் டெல்லி நிர்ணயித்த 157 ரன் இலக்கை மும்பை அணி 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 51 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். 4 ஓவர்கள் வீசி 30 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் தெரிவித்து இருந்தது. இதற்கு அணி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டது. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் மிகவும் மதிப்பு மிக்க வீரர் (தொடர்நாயகன்) விருது ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கும், வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்லுக்கும் (5 அரைசதத்துடன் 473 ரன்கள்), ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரருக்கான விருது பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலுக்கும், சூப்பர் ஸ்டிரைக்கருக்கான விருது மும்பை அதிரடி வீரர் பொல்லார்ட்டுக்கும் (ஸ்டிரைக் ரேட் 191.42), அதிக சிக்சர் அடித்தவருக்கான விருது மும்பை வீரர் இஷான் கிஷனுக்கும் (30 சிக்சர்), பவர்-பிளேயில் சிறப்பாக செயல்பட்டதற்கான சக்தி வாய்ந்த வீரர் விருது மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டுக்கும் (பவர்-பிளேயில் 15 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான ஊதா நிற தொப்பி விருது டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கும் (30 விக்கெட்), அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பி விருது பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலுக்கும் (670 ரன்கள்), ‘பேர் பிளே’ விருது மும்பை அணிக்கும் வழங்கப்பட்டன.
வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் கூறியதாவது:-
இந்த போட்டி தொடர் முழுவதும் நாங்கள் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெறுவதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தொடரின் தொடக்கத்திலேயே தெரிவித்து இருந்தோம். இதற்கும் மேலாக வீரர்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும். தொடரின் முதல் பந்தில் இருந்து தற்போது வரை எங்களது குறிக்கோளில் சரியாக இருந்தோம். நாங்கள் சிறப்பாக செயல்பட திரைமறைவில் இருந்து பணியாற்றிய பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கே இதன் நிறைய பெருமைகள் சாரும். ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே நாங்கள் எங்களுடைய தயார்படுத்துதல் பணியை தொடங்கி விட்டோம். என்ன தவறு செய்கிறோம். எதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்தோம். சரியான கலவையிலான அணியை தேர்வு செய்து விட்டு கேப்டன் அமைதியாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். குச்சியை வைத்து மிரட்டி யாரையும் வேலை வாங்கும் கேப்டன் நான் அல்ல. வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தான் கேப்டன் செயல்பட வேண்டும். எங்களது பேட்டிங்கை பொறுத்தமட்டில் ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகியோரை வெவ்வேறு வரிசையில் பயன்படுத்தினோம். அதுபோல் போல் தான் பவுலர்களையும் மாற்றி, மாற்றி உபயோகப்படுத்தினோம். எங்களது அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. இறுதிப்போட்டியில் எதிர்பாராதவிதமாக ராகுல் சாஹருக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. யுக்தி ரீதியாக ஜெயந்த் யாதவ் அணிக்கு தேவைப்பட்டார். சிறந்த அணியை உருவாக்குவதற்காக ஆடும் லெவனை மாற்றும் போது அது யாரையும் பெரிய அளவில் பாதிக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். முதல் பந்திலேயே நாங்கள் விக்கெட்டை வீழ்த்தினோம். அடுத்து உடனடியாக மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினோம். அந்த நெருக்கடியை தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பந்து வீச்சாளர்கள் எங்களது திட்டத்தை நிறைவாக செயல்படுத்தினார்கள். இந்த சீசனில் எங்களது பந்து வீச்சாளர்கள் அனைவரும் நேர்த்தியாக செயல்பட்டனர்.
இஷான் கிஷன் நாங்கள் விரும்பிய மாதிரி களத்தில் அபாரமாக செயல்பட்டார். சூர்யகுமார் யாதவ் சூப்பர் பார்மில் இருந்தார். அவருக்காக நான் எனது விக்கெட்டை தியாகம் செய்து இருக்க வேண்டும். அவரது செயலை (ரோகித் சர்மாவுக்காக, சூர்யகுமார் யாதவ் ரன்-அவுட் ஆனார்) நான் மிகவும் பாராட்டுகிறேன். அது மாதிரி செய்வது எளிதான காரியம் அல்ல. அவர்கள் இருவருக்கும் (இஷான் கிஷன், சூர்யகுமார்) நீங்கள் இதுபோல் உத்வேகமும், நம்பிக்கையும் அளித்தால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். டெல்லி அணியின் பிரதான பவுலர் அஸ்வின். அவர்களுடைய முக்கியமான பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவரது பந்து வீச்சை அடித்து ஆடினேன். இதுபோன்ற ரன் விரட்டலின் (சேசிங்) போது நல்ல தொடக்கம் காண வேண்டியது முக்கியமாகும். வலுவான தொடக்கம் ஏற்படுத்தி விட்டால் பின்னால் வரும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இருக்காது. எனவே தான் முதல் 3-4 ஓவர்களில் அதிரடி காட்டினோம். மற்ற படி எந்த வீரரின் பந்து வீச்சுக்கு எதிராகவும் திட்டமிட்டு செயல்படவில்லை. ரசிகர்கள் தான் எங்களை அதிகம் ஊக்குவிக்கக்கூடியவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த முறை ரசிகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆட முடியாததை இழப்பாக உணர்கிறேன். இந்த போட்டி பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த எல்லா தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டி தொடர் நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
இரண்டு லீக், முதலாவது தகுதி சுற்று, இறுதிப்போட்டி என்று இந்த சீசனில் மும்பையிடம் டெல்லி அணி 4 முறை உதைவாங்கிவிட்டது. தோல்விக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘பணிச்சுமையால் ஏற்பட்ட சோர்வு காரணமாக எங்களது பவுலர்கள் ‘பவர்- பிளே’யில் நன்றாக செயல்பட முடியாமல் போய் இருக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவை சரியானதாகவே கருதுகிறேன். இறுதிப்போட்டியில் நல்ல தொடக்கம் காண வேண்டியது முக்கியமானதாகும். அதை செய்ய தவறி விட்டோம். நாங்கள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ரன் எடுக்க வேண்டியதுடன், விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் தேவையானதாக இருந்தது. பவர்-பிளேயில் தேவையான அளவுக்கு ரன்கள் சேர்த்தோம். 15-வது ஓவர் வரை நாங்கள் கவுரவமான ஸ்கோரை எட்டியதாக நினைக்கிறேன். அதன் பிறகு சரிவை சந்தித்தோம். தோல்வி அடைந்தாலும் இந்த சீசனில் எங்கள் அணியின் பயணம் மகத்தானது. எங்கள் வீரர்களை நினைத்து பெருமிதம் அடைகிறேன். ஐ.பி.எல்.-ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது என்பது எளிதான காரியமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். ஐ.பி.எல். கோப்பையை வெல்வது இன்னும் ஒருபடி மேலானதாகும். அடுத்த முறை கோப்பையை வெல்ல வலுவாக திரும்பி வருவோம்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி