எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை 7,526 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. எனினும், தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை. கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நிவர் புயல் மழையால் பெருமளவு பொருட்சேதம், மற்றும் உயிர்சேதம் இல்லை. சிறப்பான முறையில் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலிலேயே சரியான முறையில் நடவடிக்கை எடுத்த காரணத்தினால் எந்தவித சேதமும் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி அரசு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உணவு மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நானும் துணை முதல்வரும் நேரில் சென்று பார்த்தோம். மாவட்ட அமைச்சர்கள் நேரடியாக சென்று உதவி செய்தனர். வருவாய்துறை அமைச்சர் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் தங்கி நிலவரம் குறித்து ஆலோசித்து மக்களுக்கு எடுத்து சொல்லி அறிவுரைகளை வழங்கினார்.
தமிழகத்தில் புயலின் தாக்கம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார். மத்திய குழுவையும் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். என்னுடன் இரவு 9 மணி அளவில் பிரதமர் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்ற நல்ல செய்தியை அவர் வழங்கினார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என பிரதமரும், அமித்ஷாவும் தெரிவித்தது மகிழ்ச்சி தருகிறது. இந்த புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. அதிக தண்ணீர் வரத்துக் காரணமாக பாலாறு, மகாநதி உட்பட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அதையும் மாவட்ட கலெக்டர்கள் சரியாக கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையை பொறுத்தவரை தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன. முழுவீச்சில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் அதிகஅளவில் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள். அடிக்கடி இதுபோன்று நிகழ்வதால் இதற்கு நிரந்தர தீர்வு காண திட்டம் வகுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கனமழை காரணமாக மேலே குறிப்பிட்ட பகுதி மக்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். தேங்கிய நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எந்தெந்த மாவட்டங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததோ அவற்றை எல்லாம் அகற்ற அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
மழை வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. எவ்வளவு பயிர் சேதம் அடைந்து இருக்கிறது என முறையான கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். மேலும் பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் உரிய தொகை பெற்றுத் தரப்படும். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உயிரிழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அந்த தொகை வழங்கப்படும். தமிழகம் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக தொடர்ந்து 3- வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளை நடத்தி இந்த விருதை நமக்கு வழங்குகிறார்கள். பெரிய மாநிலங்களில் உள்ள வளர்ச்சி மற்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற பாடுபட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசு பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது ஒட்டுமொத்த முயற்சியால் தான் இந்த விருது கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்புப் பணி குறித்தும், அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்கு எனது தலைமையில், 12 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றன. அதேபோல, 10 முறை மருத்துவ வல்லுநர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் தலைமையில், 13 முறை மாவட்ட கலெக்டர்களுடைய ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, மாவட்ட நிர்வாகமும் அதனை பின்பற்றியதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதேபோல, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களை அரசு கவனமாக பரிசீலித்து, தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டது.
கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அம்மாவின் அரசால் தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அரசு செலவு ரூபாய் 7,525.71 கோடியாகும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் கபசுரக் குடிநீர், இரண்டு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்பாட்டிற்குள் உள்ளது. வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி இரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து குணமடையச் செய்ததன் வாயிலாக நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, இதுவரை 5,22,530 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2,79,36,147 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள். இதில் 11,46,363 நபர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிய முடிந்தது. அத்துடன், விளம்பரத் தாள்கள் மூலம் இரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோயால் உள்ளவர்களுக்கான தேவையான அறிவுரைகளை வழங்கி, அதனை வீடு, வீடாகக் கொண்டு சேர்க்கப்பட்டதன் விளைவாகவும் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மருத்துவம் சார்ந்த செலவினம் 1,983 கோடி ரூபாயும், நிவாரணம் சார்ந்த செலவினம் 5,389 கோடி ரூபாயும் ஆகும். அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்தும், பி.சி.ஆர். சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவை தொடர்ந்து நடைபெற்ற காரணத்தினால் இன்றைக்கு நோய்ப்பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் 220 ஆய்வகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் 67 அரசு ஆய்வகங்களும், 153 தனியார் ஆய்வகங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, இந்நோயைக் கண்டறிய இந்தியாவிலேயே அதிகளவில் ஆய்வகங்களை ஏற்படுத்தியதும் அம்மாவின் அரசுதான். இதுவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1.18 கோடி. தற்போது நாளொன்றுக்கு சுமார் 70,000 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 95,000 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளோம். இவ்வாறு, அதிகளவில் பரிசோதனை மேற்கொண்டதன் விளைவாக நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்தளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. மொத்த பரிசோதனையில் 76 விழுக்காடு அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டன. பிற மாநிலங்களில் பரிசோதனை குறைந்தபோதும், தமிழ்நாடு அரசு அந்தப் பரிசோதனைகளை குறைக்காமல் இதுவரை தொடர்ந்து முழுமூச்சுடன் செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொண்டது. மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,41,527 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,714 படுக்கைகளும் ஐ.சி.யூ வசதி கொண்ட 7,697 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்கள் எனக் கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. கோவிட் நோய்க்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க கூடுதலாக மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் 400 எம்.ஜி., ரெம்டெஸ்விர் 100 எம்.ஜி., இனாக்சபெரின் 40 எம்.ஜி. போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என் 95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள், சிடி ஸ்கேன், எக்ஸ் ரே இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்து நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நோய் மேலாண்மைக்காக அலோபதி மருத்துவத்துடன்- இந்திய முறை மருத்துவ (ஆயுஷ்) சிகிச்சை – நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகம். தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 மினி கிளினிக் துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்தல், காய்ச்சல் சிறப்பு முகாம்கள், ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்குதல், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி இல்லாது இருந்தால், அவர்களுக்கு அவ்வசதியை அரசு மையங்களில் ஏற்படுத்தி, 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குதல், தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டன.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, திருமழிசைக்கு மாற்றப்பட்டு, இந்நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைந்தவுடன் மீண்டும் கோயம்பேட்டிலேயே செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பிரதமர், காணொலிக் காட்சி மூலமாக தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தார். உடன், பிரதமர் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த முறையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்று பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்ற செய்தியையும் தெரிவித்தார். அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகை காலங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் தவறாமல் முகக் கவசம் அணிதல், மற்றும் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றாதவர்கள் மீது அபராத விதிப்பு போன்ற நடவடிக்கைகளாலும் இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஏனென்றால், இவற்றை பல்வேறு மாநிலங்களில் சரிவர கடைபிடிக்காத காரணத்தால் நோய்ப் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததன் மூலமும், அம்மாவின் அரசு அறிவித்த அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் சரியாக கடைபிடித்ததன் மூலமும், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கியதன் மூலமாகவும் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் குறைந்து இயல்பு நிலை திரும்புவதற்கு அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்போடு மீண்டும், மீண்டும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய்ப் பரவல் முழுவதும் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய்த் தொற்று நிலையைப் பொறுத்தவரை, அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று குறைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு நிலை திரும்புவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது.
அம்மாவின் அரசால் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கப்பட்டதால், பொதுமக்கள் அந்தச் சிரமத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 14 நல வாரிய தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் என 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2000 ரூபாயும். மேலும், 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாயும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு
02 May 2024பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",