எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 9-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. மும்பை அணியில் மார்கோ ஜேன்சனுக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் 4 மாற்றமாக டி.நடராஜன், விருத்திமான் சஹா, ஜாசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு விராட் சிங், அபிஷேக் ஷர்மா, முஜீப் ரகுமான், கலீல் அகமது இடம் பெற்றனர்.
‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரும், குயின்டான் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்து பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கினர். முஜீப் ரகுமான், புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சிக்சர்களை ஓடவிட்ட ரோகித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கினார். இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன் திரட்டினர். இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் விஜய் சங்கர் பிரித்தார். அவர் வீசிய பந்தை ரோகித் சர்மா (32 ரன், 25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். அவரது அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவும் (10 ரன்) சிக்கினார்.
இதன் பிறகு மும்பையின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. 10 முதல் 16-வது ஓவர் வரை பந்து ஒரு தடவை மட்டுமே எல்லைக்கோட்டை தொட்டது. குயின்டான் டி காக் 40 ரன்னிலும் (39 பந்து, 5 பவுண்டரி), களம் கண்டது முதலே தடுமாறிய இஷான் கிஷன் 12 ரன்னிலும் (21 பந்து) நடையை கட்டினர்.
கடினமான இந்த ஆடுகளத்தில் கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ஆறுதல் அளித்தார். சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்துவீச்சில் விளாசிய ஒரு சிக்சர் 105 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. இந்த சீசனில் மெகா சிக்சர் இது தான். இதே போல் புவனேஷ்வர்குமாரின் ஓவரில் கடைசி இரு பந்தையும் சிக்சராக்கி 150 ரன் என்ற சவாலான ஸ்கோரை அடைவதற்கு வழிவகுத்தார். இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னில் வீழ்ந்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. பொல்லார்ட் 35 ரன்களுடனும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), குருணல் பாண்ட்யா 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் விஜய் சங்கர், முஜீப் ரகுமான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 151 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களம் புகுந்தனர். அதிரடி காட்டிய பேர்ஸ்டோ, வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் 2 சிக்சர் தெறிக்க விட்டார். இதனால் பவர்-பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து திடமான நிலையில் காணப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக பேர்ஸ்டோ (43 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ ஆகிப்போனார். இதே போல் வார்னர் (36 ரன், 34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தேவையில்லாமல் ஓடி ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மும்பை பக்கம் திரும்பியது. மிடில் வரிசையில் விஜய் சங்கர் (28 ரன், 25 பந்து, 2 சிக்சர்) சற்று போராடிப் பார்த்தார். 19.4 ஓவர்களில் அந்த அணி 137 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஐதராபாத்துக்கு விழுந்த 3-வது அடியாகும். ஹட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள ஐதாரபாத் அணி ஏப்ரல் 21-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
ஃபிரிட்ஜை உடைத்த பேர்ஸ்டோ
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியை தழுவிய போதிலும் கூட அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் இணை 7.2 ஓவர்கள் வரை களத்தில் இருந்த நிலையில் 67 ரன்கள் குவித்து மும்பை அணியின் பந்து வீச்சை நொறுக்கி எடுத்தனர்.
இதில் பல முறை ஜானி பேர்ஸ்டோ பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். சேஸிங்கின் போது ட்ரெண்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் பிரமாதமான 2 சிக்ஸர்களை பேர்ஸ்டோ தூக்கினார். அதில் ஒன்று டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பருக்கு மேல் பறந்தது. ஆனால் 2-வது சிக்ஸர் லாங் ஆனுக்கு தூக்கி அடித்தார் பேர்ஸ்டோ. அவர் சிக்ஸர் அடித்த பகுதியானது சன்ரைசர்ஸ் அணியினரின் டக் அவுட் பகுதியாகும் . பேர்ஸ்டோ தூக்கிய சிக்ஸானது அங்கிருந்த ஃபிரிட்ஜ் ஒன்றை பதம் பார்த்தது. இதில் ஃபிரிட்ஜின் கண்ணாடி நொறுங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.