எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில், மாநில திட்டக் குழு, கலைஞரால் 1971-ம் ஆண்டு மே திங்கள் 25-ம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். இராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து, (ஓய்வு), மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் T.R.B. இராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பொருளாதார மாற்றங்கள் குறித்து ஏறத்தாழ 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்களுக்காகவும், சர்வதேச ஆய்வு நிறுவனங்களுக்காகவும் ஆய்வுகள் மேற்கொண்டவர்.
பேராசிரியர் இராம. சீனுவாசன், சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பல்கலைகழக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2006-2011 ஆகிய ஐந்து ஆண்டுகள் தமிழக அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தார், அதில் முதல் இரண்டு ஆண்டுகள் முழுநேர உறுப்பினராக இருந்தார். 2017-2020 ஆகிய மூன்று ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றினார். தற்போது சென்னை பல்கலைக் கழத்தின் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும், பல்கலைக் கழக ஆராய்ச்சி பிரிவு டீன், மற்றும் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளார்.
பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Stuidies) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதியம், ஐக்கிய நாடுகளின் சமூக வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம் (The United Nations Research Institute for Social Development -UNRISD) ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ள அவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளியலுக்கான முனைவர் பட்டம் பெற்றவர்.
தீனபந்து (ஓய்வு), 1982-ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். பொருளாதாரத்தில் M.A. மற்றும் M.Phil., பட்டங்கள் பெற்ற இவர், இந்திய ஆட்சிப் பணியில் பணியில் சேருவதற்கு முன்பாக, State Bank of India வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணியாற்றியவர். தமிழ் நாடு அரசில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வாரியம், கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். இவரது பணிக் காலத்தில், இலங்கை அகதிகளுக்கு வீட்டு வசதித் திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகைத் திட்டம், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம், இராமநாதபுரம் மற்றும் ஓக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம், அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பணிகள் நடைபெற்றன.
பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னையில் உள்ள லாப நோக்கமற்ற அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர், ஆலோசகர் அவர் 25 நவம்பர் 1974 முதல் புது கல்லூரியில் (The New College) விலங்கியல் பேராசிரியராக இருந்தார், பின்னர் அவர் விலங்கியல் துறையின் தலைவராகவும் பின்னர் உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். இவர் இந்திய மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர். ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது. 1994-95 ஆம் ஆண்டிற்கான CASTME விருது அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்டது. 2005 தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுசூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக அறிஞர் அண்ணா விருது. ஜூன் 2018-ல் சீனாவின் 1-வது உலக மண்புழு தொழில் மன்றத்தின் சிறப்பு பங்களிப்பு விருது 2019 the Champion of Chennai விருதும் பெற்றுள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன், சித்த மருத்துவத்தில் பட்டமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து, அதன் பயனை உலகெங்கும் பரவலாக்கியதிலும், உலகெங்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவ முறையாக நகர்த்தியமைக்கும் பெரும்பங்கு வகித்தவர்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானியங்களின் ஊட்டம் குறித்த பயன்பாட்டை, அதன் சூழலுக்கு இசைவான உழவு குறித்த பயனை, உலகெங்கும் பல தளங்களில் உரையாடி, வெகுசன ஊடகங்களில் கட்டுரைகளாகவும், காட்சி ஊடகங்களில் தெளிவுற உரைத்தும் இன்றும் சிறுதானியப் பயன்பாட்டை பெரிதும் உயர்த்தியதில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
வாங்க வாழலாம் என்ற இவர் எழுதிய நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்ற நூல். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சிறந்த மருத்துவர் விருது, அமெரிக்காவின் பெட்னா அமைப்பின் விருது,. 2021 ஆண்டில் கனடா நாட்டு தமிழ்ச்சங்கத்தின் தமிழ் மரபுக்காலவலர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
பத்மஶ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ், தனது நளினமான நடனத்தினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். உலக அளவில் எண்ணற்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். குறிப்பாக இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஶ்ரீ விருதைப் பெற்ற முதல் திருநங்கை நடனக் கலைஞர் இவர். மிகப்பழமையான தஞ்சாவூர் நடனமுறைகளை முதன்மையாகக் கொண்டு இவர் வழங்கி வரும் நடனம் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
மல்லிகா ஶ்ரீனிவாசன், டிராக்டர் அண்டு பார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE Limited) என்ற வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் அங்கம் வகிக்கும் நிறுவனம், இந்திய வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டிராக்டர்களை, ஏறத்தாழ 100 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளதார அளவியல் (Econometrics) பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். 2014-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், 1986-ம் ஆண்டு ஒரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக அரசுப் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை மருத்துவ கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மற்றும் இயக்குனராகப் பணி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2008-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உருவாக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றியவர் ஆவார். இத்திட்டம் இந்தியாவின் முன்னோடி என பல இந்திய, சர்வதேச பத்திரிகைகள் பாராட்டின. உலக புகழ் பெற்ற க்ஷசவைiளா ஆநனiஉயட துடிரசயேட இத்திட்டத்தை பாராட்டி ஒரு கட்டுரை எழுதியது முக்கியமான ஒன்றாகும்.
T.R.B ராஜா கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர் ஆலோசனை உளவியல் மற்றும் மேலாண்மைப் படிப்பில் ((Counselling Psychology & Management) முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினராகவும், மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் அங்கம் வகித்தவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.