எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் போட்டியின் 35-வது லீக் ஆட்டம், வெள்ளிக்கிழமை சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், மகேந்திர சிங் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை சூப்பங் கிங்ஸ்.
கோலி - படிக்கல்...
டாஸ் வென்ற சென்னை, பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
111 ரன்கள் வரை...
13.2 ஓவர் வரை இருவரும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 111 ரன்கள் வரை குவித்தனர். இருவருமே அரை சதம் விளாசியதும் பாராட்டுக்குரியது. பெங்களூருக்கு இந்த இரு பேட்ஸ்மென்களும் இரும்பு அரண் போல நின்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த போது, சென்னை விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது என்றே சொல்லலாம்.
தகர்த்தார் ப்ராவோ...
ஹேசல்வுட், ஜடேஜா, ப்ராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என சென்னையின் அனைத்து பந்து வீச்சாளர்களும் ஒரு சுற்று வந்துவிட்டனர். அப்போதும் பெங்களூரின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, ப்ராவோவின் 13.2-வது பந்தில், விராட் கோலி அடித்த பந்து ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. பெங்களூரின் பேட்டிங் அரண் தகர்ந்தது.
அடுத்தடுத்து அவுட்...
வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருக்கும் பெங்களூரு அணி, அடுத்தடுத்து சிறப்பாக அடித்து ஆடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஏ பி டிவில்லியர்ஸ், தேவ் தத் படிக்கல், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் என எல்லா முன்னணி பேட்ஸ்மென்களும் சீட்டு கட்டு போல சரிந்தது. கோலி, படிக்கல் தவிர எந்த ஒரு பெங்களூரு பேட்ஸ்மென்னும் 15 ரன்களைக் கூட தொடவில்லை.
7 ஓவர்களில்...
13 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் ஆடி வந்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளைப் பரிகொடுத்து 45 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரின் பேட்டிங் அரணைத் தகர்த்த ப்ராவோ, 4 ஓவர்களுக்கு 24 ரன்களை விட்டுக் கொடுத்து, கோலி, மேக்ஸ்வெல் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை வசம்...
அவரைத் தொடர்ந்து 4 ஓவர்களை வீசிய ஷர்துல் தாகூர் 29 ரன்களைக் கொடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 14-வது ஓவர் முதல் ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு ஆட்டம் நிறைவடையும் வரை அவர்களே ஆதிக்கம் செலுத்தி வென்றனர்.
157 ரன்கள் இலக்கு...
பெங்களூரின் ஆட்டத்துக்குப் பிறகு, ஷார்ஜா போன்ற மைதானத்தில் சென்னை போன்ற அணிக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது போதாது என கூறப்பட்டது. 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசி ஜோடி சிறப்பாகத் தொடங்கினர்.
மொயின் - அம்பதி...
8.2-வது ஓவரில் 38 ரன்களோடு ரிதுராஜும், 9.1-வது ஓவரில் 31 ரன்களோடு ஃபாஃப் டூப்ளசியும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருப்பினும் சென்னையின் பேட்டிங் லைன் அப் வலுவானது என்பதால், அடுத்தடுத்து வந்த மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் அடித்து விளையாடினர்.
4-வது முறை...
கடைசியில் சுரேஷ் ரெய்னா, டோனி இணை நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர். இந்த ஜோடி இணைந்து ஐ.பி.எல் போட்டிகளை நிறைவு செய்வது இது நான்காவது முறை.சென்னை 11 பந்துகளுக்கு முன்பே அடித்து போட்டியை வென்றது. ப்ராவோ பந்துவீச்சு பெங்களூருவின் ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது, சென்னை எளிதில் வெற்றி பெற வழிவகுத்தது.
தொடர்ந்து சறுக்கல்
ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் 2021 சீசன் தொடங்கிய போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளை வெற்றி கொண்டனர்.
2021 ஏப்ரல் 25 அன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான முதல் போட்டியில், தோல்வி கண்டது பெங்களூரு. அப்போது முதல் அவ்வணியின் சறுக்கல் தொடர்ந்து வருகிறது. அதன் பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் மட்டுமே வென்றது பெங்களூரு.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலும், பெங்களூரு அணி 9 போட்டியில் 5-ல் வென்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்து: கேரளாவில் சிறுவன் உள்பட 5 பேர் பலி
30 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியானார்கள்.