எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 2 முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையாக தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சியில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புராதான அங்காடிகள்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 18 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட உய்யகொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூர் மாநகராட்சியில் 15 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தில் 14 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம்,
திருநெல்வேலி மாநகராட்சியில், 13 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், இப்பேருந்து நிலையத்தில் 11 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தம், 14 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்த நடைமேடைகள், 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலைய கூடுதல் கட்டடம், 4 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா, 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்காவிற்கான கூடுதல் வசதிகள்,
திருநெல்வேலி மாநகராட்சியில் 13 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேலப்பாளையத்தில் 12 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 பசுமை வளாகப் பூங்காக்கள்,
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகப் பயன்பாட்டிற்காக 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை அமைப்பின் கீழ் தெரு துடைக்கும் இயந்திரம் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம், திருநெல்வேலி மாநகராட்சி, கே.டி.சி. நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின் விளக்குகள் த.மு. சாலையில் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருசக்கர வாகன நிறுத்தம், என்.ஜி.ஓ. காலனியில் மிதிவண்டிகள் செல்ல ஏதுவாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மிதிவண்டிப் பாதை,
வேலூர் மாநகராட்சியில் 13 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2.40 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சத்துவாச்சாரி வணிக வளாக மையம், விருப்பாச்சிபுரம், கன்னிகாபுரம் பகுதியில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டிடம்,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டிடம் மற்றும் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை,
தேனி மாவட்டம், சின்னமன்னுர் நகராட்சி, சமயகுளத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்புக் கட்டிடம், போடிநாயக்கனூர் நகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பொது சுகாதார வார்டு அலுவலகக் கட்டிடங்கள்,
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சி, காமராஜர் நகரில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டிடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி, மேலத்தூர் சாலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டிடம்,
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி, போகநல்லூர் உரக்கிடங்கு வளாகம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி, வாகைக்குளம் உரக்கிடங்கு வளாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, கோட்டவிளைபட்டிரோடு உரக்கிடங்கு வளாகம், விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை நகராட்சி, சுக்கிலநத்தம் உரக்கிடங்கு வளாகம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, அந்நியூர் உரக்கிடங்கு வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் நகராட்சி, வெங்கடேசபுரம் உரக்கிடங்கு வளாகம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி, ஆர்.பி. சிவம் நகர் ஆகிய இடங்களில் 24 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடம்,
நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் செயல்படும் பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில், இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் நெமிலி பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் தங்குமிடம், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை மற்றும் நம்பியூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடிகாலுடன் கூடிய தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 241 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் மற்றும் மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படை தளம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பேரூராட்சி ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்கிடவும், பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக்குடிநீர் திட்டம்,
தென்பெண்ணை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 8.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகொண்டபள்ளி மற்றும் 27 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மொத்தம் 533 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முன்களப் பணியாளர்கள், களப்பணியாளர் ஜி. கணேசன் மற்றும் மின்னியலாளர் எம். பாலாஜி ஆகியோரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நிவாரண உதவித்தொகையாக தலா 25 லட்சம் ருபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
பேரூராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 37 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வரித்தண்டலர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், துப்புரவு மேற்பார்வையாளர், குழாய் திறப்பாளர், மதகு திறப்பாளர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 1000 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், குழாய் திருப்புநர், தூய்மைப் பணியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், பி. மூர்த்தி, முனைவர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா. பொன்னையா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர்
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.