எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்
இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆயிரமாவது மாஸ்டர் போட்டி ஒற்றையர் பிரிவில் 16வது முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
____________
பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகல்..!
ஐ.பி.எல் 15வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி ,7 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கபப்டுகிறது.
____________
சென்னை கேப்டன் டோனி குறித்து ஹைடன் கணிப்பு..!
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், ஐ.பி.எல் 2022 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து சிஎஸ்கே வெளியேற்றப்பட்ட பிறகு சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹேடனின் கருத்துக்கள் வெளியாகின.
“விக்கெட்டுகளுக்கு இடையே டோனி எவ்வளவு வேகமாக ஓடுகிறார்! 20 ஓவர் அளவிலான போட்டிக்குள் ஒரு சாதாரண விளையாட்டு வீரரின் வயதைத் தாண்டி ஒரு இளைஞனை போல விளையாடுகிறார். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அவரால் முடியும், ஏனெனில் அவர் நிச்சயமாக தனது அணிக்காகத் விளையாடுவார். தலைமைக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது! டோனி போன்ற ஒருவர் தலைமையில் இருக்கிறார். அது சென்னை அணிக்கே நிலைத் தன்மையை கொண்டு வரும்.”என்று மேத்யூ ஹைடன் கூறினார்.
____________
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: ரிஷி தவன்
நடப்பு ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருபவர் ரிஷி தவன். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாவதே தனது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிஷி தவன் கூறுகையில், " நான்கு வருடங்கள் ஐ.பி.எல்லில் சிறப்பாக விளையாடிய பிறகு இந்திய அணியில் அறிமுகமானேன். பின்னர் நீக்கப்பட்டேன். ஐந்து ஆண்டுகளாக யாரும் என்னை தேர்வு செய்யவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எனது செயல்பாடுகள் கவனிக்கப்படவில்லை. இந்திய அணிக்கு மீண்டும் வருவதே எனது நோக்கம், அதைச் செய்ய நீங்கள் சரியான விதத்தில் சத்தம் போட வேண்டும் என்றார்.
____________
நடிகை நயன்தார படத்தை தயாரிக்கிறாரா டோனி..?
நடிகை நயன்தாராவை வைத்து டோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் புதிய படத்தை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த தயாரிப்புப் பணியில் ரஜினியின் பள்ளியில் பணியாற்றி வந்த சஞ்சய் என்பவர் இணைந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியான மறுநாளே டோனி எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் சார்பில் ஒரு மறுப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், நாங்கள் தற்போது சஞ்சய் என்ற நபருடன் எந்த படத்தயாரிப்புப் பணியிலும் ஈடுபடவில்லை. சஞ்சய் என்ற பெயரில் நாங்கள் யாரையும் பணியமர்த்தவில்லை. அந்த பெயரில் வெளியாகும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். இருப்பினும் சுவாரஸ்மான திரைப்படங்களை எடுப்பதற்கான பணிகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படத்தயாரிப்பு உறுதியானபின், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். டோனி நிறுவனத்திற்காக விக்னேஷ் சிவன் ஒரு விளம்பரப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
____________
முடிவை மாற்றிய நடுவர்: ட்ரோல் செய்த ரசிகர்கள்
98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் பலமான கூட்டணி அமைத்தனர் திலக் வர்மா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன். பவர் பிளேயின் கடைசி ஓவரை சிமர்ஜித் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஹிருத்திக் ஷோக்கீன், இறங்கி வந்து ஆட முயன்றார். ஆனாலும் அதை மிஸ் செய்திருந்தார் அவர். அதற்கு வொய்ட் சிக்னல் கொடுக்க முயன்றார் நடுவர் சிர்ரா ரவிகாந்த் ரெட்டி. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அப்பீல் செய்தனர். அதையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்ட நடுவர், அவுட் என அறிவித்தார்.
இருந்தாலும் DRS ரிவ்யூ எடுத்து தப்பினார் ஹிருத்திக் ஷோக்கீன். தொடர்ந்து ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. மோசமான அம்பயரிங், நல்ல வேளையாக DRS ரிவ்யூ வேலை செய்தது, நடுவர் அவுட் என அறிவிக்க காரணமே டோனி தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர். முன்னதாக, இந்த போட்டியில் மின்தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவான் கான்வே, DRS ரிவ்யூ ஆப்ஷனை எடுக்க முடியாமல் வெளியேறினார். அது சர்ச்சையாக எழுந்திருந்தது.
____________
ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார் பிருத்வி ஷா..!
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பிரித்வி ஷா காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மே 1 அன்று கடைசியாக லக்னோவுக்கு எதிராக பிரித்வி ஷா விளையாடினார் அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் பிருத்வி ஷாவுக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்