முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி தேவாலய விழாவில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      உலகம்
Italy 2022 05 15

Source: provided

ரோம் : குமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் இத்தாலி தேவாலய விழாவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலித்தது.

தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நேற்று ரோம் நகரில் நடைபெற்றது. முன்னதாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அருட்சகோதரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழக மக்கள் சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அன்பு தான் எல்லாம் என்றிருக்கும் இந்த உலகில் அன்பைப் பரிமாறி கொள்ளத்தான் அன்பு மூலம் உங்களுக்கு நன்றி சொல்ல தான் முதல்வர் எங்களை இங்கு அனுப்பினார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து