எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தமிழக அரசின் புதிய கொள்கை முடிவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் போது மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். மேலும் பல ஆண்டுகளாக போராட்டமும் நடத்தினார்கள்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இதற்கான அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் நலப்பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர் மறுவாழ்வு சங்கம் சார்பாக அதன் தலைவர் தன்ராஜ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த 2011ல் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மற்றும் அதில் இறந்து போன மக்கள் நலப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு கண் துடைப்பு நடவடிக்கை. குறிப்பிட்ட இந்த 7500 ரூபாய் தொகையை மட்டுமே ஊதியமாக வழங்குவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மக்கள் நலபணியாளர்களில் பலர் ஓரிரு ஆண்டுகளில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். எனவே ஏற்கனவே முன்னதாக வழங்கப்பட்ட ஊதிய நிர்ணயபடியும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடியும் நியாயமான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் புதிய கொள்கை முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறைகால சிறப்பு அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன், தமிழக அரசு ஏற்கனவே கொரோனா காலத்தில் சந்தித்த நிதி பிரச்சினைகளுக்கிடையேயும் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7500 ரூபாய் ஊதியம் நிர்ணயித்து அவர்களை மீண்டும் பணியமர்த்த இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது. எனவே தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்கக்கூடாது, ஏனெனில் ஏற்கனவே மக்கள் நலப்பணியாளர்களில் பலர் தமிழக அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தற்போது வேண்டுமென்றே அரசியலாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அப்போது மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில், பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்ட தங்கள் சங்கத்தில் உள்ளவர்கள் இதுவரை தமிழக அரசின் முடிவை ஏற்கவில்லை. எனவே தமிழக அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.
இதனையடுத்து நீதிபதிகள், உங்கள் சங்க பிரச்சினைகளில் தயவு செய்து அரசியலை கொண்டு வராதீர்கள் என தெரிவித்தனர். தமிழக அரசின் முடிவில் விருப்பமுள்ளவர்கள் தங்களது பணியினை ஏற்றுக்கொள்ளலாம் என அரசு கூறியிருக்கிறது. மற்றவர்களுக்கு பிரச்சினை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கூறியுள்ளது. ஆதலால் ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. எனவே தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்கப் போவதில்லை.
மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தமிழக அரசின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் புதிய முடிவிற்கு உடன்பட யாவரையும் கட்டாயப்படுத்த கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.