முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.  இது குறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும்.

ஆகவே இதனை கருத்தில் கொண்டு,  இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசினை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது.  இவ்வாறு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து