எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. இந்நிலையில் இந்திய டி20 அணி பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: டி20 கிரிக்கெட்டில் நெஹ்ரா போன்ற ஒருவர் பயிற்சியாளராக இருக்கவேண்டும். அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.
ராகுல் மீது எனக்கு மரியாதை உண்டு. டி20 கிரிக்கெட் பற்றி ராகுல் டிராவிடை விடவும் நெஹ்ராவுக்கு அதிகம் தெரியும். டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் விளையாடிய ஒருவர் பயிற்சியாளர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார். அதற்காக டிராவிடை நீக்க வேண்டும் என நான் கூறவில்லை. டிராவிடும் நெஹ்ராவும் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை உருவாக்கலாம் என்றார்.
________________
ரசிகர் மொபைலை தட்டிவிட்ட
ரொனால்டோவிற்கு அபராதம்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ரசிகரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவிற்கு ரூ50 லட்சம் அபராதமும் 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத்தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து அவர் இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பால் போட்டியில் பங்கேற்காத சூழல் ரொனால்டோவிற்கு ஏற்பட்டுள்ளது.
________________
ஒப்பந்தத்தில் இருந்து
வெளியேறிய கப்தில்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடி வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார். இது குறித்து கப்தில் கூறுகையில்., எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு பெரிய கவுரவமாகும், மேலும் நியூசிலாந்து அணியில் உள்ள அனைவருக்கும் அவர்களின் ஆதரவிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என கூறியுள்ளார் .
நியூசிலாந்து அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கப்தில் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3-வது நியூசிலாந்து வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் போன்ற பெருமைகளை மார்டின் கப்தில் கொண்டுள்ளார்.
________________
நம்பர் ஒன் இடம் பிடித்த
டென்னிஸ் வீராங்கனை
டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன். ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு போன்றவர்கள் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருப்பதுடன் சமூக ஊடக தளங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். ஆனால், விளையாட்டில் முன்னணி பெற போராடும் சூழலில் இருந்து விலகி, சமூக ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ரேச்சல் இறங்கினார்.
அது அவருக்கு பலனளித்து உள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்தவரான ரேச்சல், டிக்டாக்கில் பிரபல நபரானார். அவரது தந்திரம் நிறைந்த ஷாட்டுகளை பார்ப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை டிக்டாக்கில் பின்தொடருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமடைந்துள்ள ரேச்சல் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதனால், டென்னிசில் சமூக ஊடகம் வழியே அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்களின் வரிசையில் ரேச்சல் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார்.
________________
மைதானத்தை சுத்தம்
செய்த ஜப்பான் ரசிகர்கள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே போல 4 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
ஜப்பானின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கலீபா சர்வதேச மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். கோல் அடித்த போது மைதானத்தில் ஏராளமான பாட்டில்கள் வீசப்பட்டது. போட்டி முடிந்து வெளியே செல்லும் முன்பு ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இதையொட்டி ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.