முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கட்டிட திறப்பு விழாவை யாரும் அரசியலாக்க கூடாது: ராஜ்நாத்சிங் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

புது டெல்லி, பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். 

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. 

 இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிகட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.  புதிய பாராளுமன்ற கட்டிடம் ஜனநாயகம் மற்றும் அனைத்து இந்தியர்களின் விருப்பங்களின் அடையாளமாக திகழ்வதாக தெரிவித்துள்ள அவர், பாராளுமன்ற திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து