எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் கலக்குவதற்கு ரிஷப் பந்த் தயாராகி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரவின் அம்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் இரண்டு வாரங்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ரிஷப் பந்த் இரண்டு வாரங்களாக அவரை தயார்படுத்திக் கொண்டார். அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியது அவரது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்தோம். ஆட்டத்தை முடித்துக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. ரிஷப் பந்த் தனியொருவராக அனுபவம் வாய்ந்த மோஹித் சர்மாவுக்கு எதிராக 20-வது ஓவரில் 31 ரன்கள் குவித்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டமே அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று என்றார்.
டிக்கெட் விற்பனை தொடக்கம்
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய டெல்லி – குஜராத் அணிக்கு இடையேயான போட்டியுடன் 40 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை வென்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு லக்னோ அணி முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப். 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10:40 மணிக்கு இணையதளத்தில் சிஎஸ்கே – எஸ்ஆர்ஹைச் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
காயமடைந்த கேமராமேன்
ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்சும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்சும் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக மொகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2, 6, 4, 6, 6, 6 என 30 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார்.
அந்த வகையில் மொத்தமாக இப்போட்டியில் அவர் அடித்த 8 சிக்சர்களில் ஒரு சிக்சர் போட்டியை படம் பிடித்துக் கொண்டிருந்த "தேபாசிஷ்" எனும் பெயரை கொண்ட கேமராமேன் மேலே பட்டு காயத்தை ஏற்படுத்தியது. அதற்காக போட்டியின் முடிவில் ரிஷப் பண்ட் மனதார மன்னிப்பு கேட்டது பின்வருமாறு., மன்னிக்கவும் தேபாசிஷ் பாய். வேண்டுமென்றே உங்களை அடிக்கவில்லை. ஆனால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள் என்று நினைக்கிறேன். அதற்காக குட் லக்" என்று கூறியுள்ளார். ஐ.பி.எல். நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 முன்னணி வீரர்கள் விலகல்
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், அடுத்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது பாகிஸ்தான் அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
கிரிக்கெட் வீரரை தாக்கிய சிறுத்தை
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ‘கய் விட்டல்’ ஹூமானி பகுதியில் தான் பராமரித்து வரும் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென சிறுத்தையால் தாக்கப்பட்டார். ஆனால், அவரது வளர்ப்பு நாய் ‘சிகாரா’வினால் காயங்களுடன் உயிர் தப்பினார் கய் விட்டால். நாயும் சிறுத்தையிடம் கடிபட்டது. கய் விட்டல் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர். இவருக்கு இப்போது வயது 51. 1993-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் 2,207 ரன்களை எடுத்ததோடு 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவரது அதிகபட்ச ஸ்கோர் 203 நாட் அவுட். 147 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய கய் விட்டல் 2,705 ரன்களை 11 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கய் விட்டலின் படங்களை வெளியிட்டு அவரது மனைவி ஹன்னா ஸ்டூக்ஸ் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், கய் விட்டல் தலை முழுவதும் காயம் ஏற்பட்டு பேண்டேஜுடன் காணப்பட்டார். சிறுத்தை தாக்கியதையடுத்து இவருக்கு ஹராரே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னாவுக்கு சம்மன்
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சைபர் கிரைமில் புகாரளித்தது. இதுதொடர்பாக ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும், அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
ரன்களை வாரி வழங்கிய மோஹித்
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர் ஒருவரால் விட்டுக்கொடுக்கப்படும் அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
முன்னதாக சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனைக்கு மோஹித் சர்மா சொந்தக்காரர் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள்: 0/73 - மோஹித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) - தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக, 2024, 0/70 - பாசில் தம்பி (சன் ரைசர்ஸ்) - பெங்களூருவுக்கு எதிராக, 2018, 0/69 - யஸ் தயாள் (குஜராத் டைட்டன்ஸ்) - கொல்கத்தாவுக்கு எதிராக, 2023, 0/68 - ரீஸ் டாப்ளே (ஆர்சிபி) - சன் ரைசர்ஸுக்கு எதிராக, 2024, 0/66 - இஷாந்த் சர்மா (சன் ரைசர்ஸ்) - சிஎஸ்கேவுக்கு எதிராக, 2013.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.