முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல்: ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புது டெல்லி, மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்குரிமைகளைச் செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த இரு மாநிலங்களிலும் மறுதேர்தல் என்று எதுவும் நடத்தப்படவில்லை. இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு அதிகரிப்பு தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதைக் காட்டுகிறது.

 மகராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்த மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 29 கடைசி தேதி.

வேட்பு மனுக்கள் அக்டோபர் 30-ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 4ம் தேதி கடைசி நாள் ஆகும். நவம்பர் 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மகராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.63 கோடியாக உள்ளது. 

இம்மாநிலத்தில், 52,000 இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். 

 ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இந்த மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2.6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். 

இதில் 11.84 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். ஜார்க்கண்ட்டில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. 

முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கலுக்கு அக்டோபர் 25-ம் தேதியும், இரண்டாம் கட்டத்துக்கு அக்டோபர் 29-ம் தேதியும் கடைசி நாளாகும்.  முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்போடர் 30-ம் தேதியும் நடைபெறும். 

முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 1-ம் தேதி ஆகும். இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். 

இவை தவிர நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜார்க்கண்ட் முதல்கட்டத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட உள்ளது. அதாவது, இந்த 47 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து