எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : உலகத்தரம் வாய்ந்த வீரர் விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுற்றுப்பயணம்...
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலியின் பார்ம்...
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விராட் கோலியின் பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது, விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவர் நீண்டகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். 2008-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போது என்னுடன் இணைந்து தொடக்க வீரராக இறங்கியது நினைவில் இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரைக்கும் சாதிக்கும் வேட்கையுடன் காணப்படுகிறார்.
உலகத்தரம் வாய்ந்த...
இந்த வேட்கை தான் அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாக்கி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிறைய ரன் குவித்து, அந்த உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆவலில் அவர் இருப்பார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்தையும் வைத்து வீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது. அது நியாயமானதாக இருக்காது. இது ஒரு விளையாட்டு. ஏற்றத் தாழ்வு இருக்கத் தான் செய்யும். நாங்கள் தொடர்ச்சியாக 8 டெஸ்டில் விளையாட உள்ளோம். கோலி மட்டுமல்ல, ஒவ்வொருவரும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் இருப்பார்கள்.
விரும்புகிறேன்...
ஒரே நாளில் 400 அடிக்கவும் தெரிய வேண்டும். 2 நாட்கள் ஆடி டிரா செய்ய வேண்டுமா, அதைச்செய்யவும் தெரிய வேண்டும். அந்த டைப் அணியாக நாம் மாற விரும்புகிறேன். நீங்கள் அதை வளர்ச்சி என்று கூறுங்கள். சூழ்நிலைக்கேற்ப தகவமைத்தல் என்று சொல்லுங்கள், அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என்று சொல்லுங்கள் ஒரே மாதிரி ஆடிக் கொண்டிருந்தால் முன்னேற்றம் இருக்காது. நான் உலக கிரிக்கெட்டைப் பற்றி பேச முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக் கொள்கைகள் மாறுபடும். நான் என் அணியைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
டிரா செய்ய வேண்டுமா....
2 நாட்கள் போராடி டெஸ்ட்டை டிரா செய்ய வேண்டுமா அதற்கும் நம்மிடம் வீரர்கள் இருக்கிறார்கள். நமது முதல் நோக்கம் வெற்றியே. அப்படியே சூழ்நிலை மாறி போராடி டிரா செய்ய வேண்டுமா அதற்கும் தயாராக இருப்பதும் எங்கள் நோக்கம். இப்படி சவாலான டெஸ்ட் கிரிக்கெட் தான் எங்களுக்குத் தேவை. வீரர்கள் களத்தில் இறங்கி ஆக்ரோஷமாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட விரும்புகிறோம். ஒரே நாளில் 400-500 ரன்கள் குவிக்க முடியும் என்றால் ஏன் அதைத் தடுக்க வேண்டும்? அதிக ரிஸ்க் எடுப்பது அதிகப் பலன்களைத் தரும்.
எதிர்மறையாக போகும்...
சில வேளைகளில் அதிக ரிஸ்க் எதிர்மறையாகப் போகும். ஆனால் கவலையில்லை. சில வேளைகளில் இந்த ஆட்ட முறையில் 100 ரன்களுக்குக் கூட ஆட்டம் இழக்கலாம். ஆனால் கவலையில்லை. அதற்காக வீரர்களை மாற்றப்போவதில்லை. இப்படித்தான் நாட்டு மக்களுக்கு கேளிக்கை அளிக்க விரும்புகிறோம். இப்போது எங்கள் கவனம் நியூசிலாந்துக்கு எதிரான தொடர், பிறகு ஆஸ்திரேலியா, பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். நியூசிலாந்து ஒரு வித்தியாசமான சவால். அங்கு நமக்கு சவாலான வீரர்கள் உள்ளனர். ஆனால் அணுகுமுறையில் மாற்றமில்லை” என்றார் கம்பீர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை : பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
15 Oct 2024சென்னை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
15 Oct 2024சென்னை, தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2024
15 Oct 2024 -
கேரள கடற்கரை பகுதிகளுக்கு இன்று இரவு வரை ரெட் அலர்ட்: மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்
15 Oct 2024திருவனந்தபுரம், கேரள கடலோர பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 11.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு
15 Oct 2024புது டெல்லி, கனடாவில் உள்ள இந்திய தூதரை திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்
-
மழை மீட்பு பணி: காவல் கட்டுப்பாட்டு அறையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு
15 Oct 2024சென்னை, மழை மீட்பு பணிக்காக அமைக்கப்பட்ட காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
வயநாடு பார்லி. தொகுதிக்கு நவ. 13-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
15 Oct 2024புது டெல்லி, பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம்: துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்
15 Oct 2024சென்னை, பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
புயல் மழையால் திருப்பதியில் இன்று வி.ஐ.பி தரிசனம் ரத்து
15 Oct 2024திருப்பதி, புயல் மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தூய்மைப் பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
15 Oct 2024சென்னை, தூய்மை பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என அறிவிப்பு
15 Oct 2024சென்னை, தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
15 Oct 2024காசா, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள பெனி சுஹைலா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவ
-
சந்திக ஹதுருசிங்க சஸ்பெண்ட்
15 Oct 2024வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.
-
கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை
15 Oct 2024திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
உலகத்தரம் வாய்ந்த வீரர்: விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம்
15 Oct 2024பெங்களூரு : உலகத்தரம் வாய்ந்த வீரர் விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுற்றுப்பயணம்...
-
கனமழை தொடர்பாக பெறப்பட்ட 249 புகார்களில் 215-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது: தமிழக அரசு
15 Oct 2024சென்னை, கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300 நிவாரண மையங்களும்,
-
பத்திரிகை சுதந்திரத்தை காக்க போராடியவர்: மறைந்த தினபூமி நாளிதழின் ஆசிரியருக்கு டி.யு.ஜே. புகழாரம்
15 Oct 2024சென்னை : தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் அகால மரணம் அடைந்தார் என்கின்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
-
தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: இங்கிலாந்து ஆய்வில் தகவல்
15 Oct 2024லண்டன், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பேர் தொழில் வல்லுநர்களாக இருக்கிறார்கள் என பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரிப்பு
15 Oct 2024சென்னை : செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர்: கலாமை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
15 Oct 2024புது டெல்லி, அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றார் என்று அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை
15 Oct 2024சென்னை : சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்
15 Oct 2024சென்னை, சென்னை விமானநிலையத்தில் புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
-
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
15 Oct 2024புதுச்சேரி : கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழைநீர் தேக்கத்தால் 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை
15 Oct 2024சென்னை : சென்னையில் கனமழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் 2-வது பெரிய 5ஜி தொலை தொடர்பு சந்தையாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர் மோடி
15 Oct 2024புது டெல்லி, உலகின் 2-வது பெரிய 5ஜி தொலைத்தொடர்பு சந்தையாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.