எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன்:-
என் தந்தை குமரி அனந்தன் என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு. தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் காற்றில் இசையோடு கலந்து விட்டது.
எடப்பாடி பழனிசாமி:-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசைக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ராமதாஸ்:- வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்ந்தெடுக்கப்பட்ட அவர், அஞ்சல் துறை படிவங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர். விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் போராடியவர் என்றார்.
அண்ணாமலை :-
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். வைகோ:- முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என வாழ்நாள் எல்லாம் அதற்காக குரல் கொடுத்தவர்; மது இல்லா தமிழகம் காணவும், நதிகளை இணைக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முறை தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டு நடைபயண நாயகர் எனும் சிறப்புக்கு உரியவர் ஆனார்.
செல்வப்பெருந்தகை:
தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது இளமைக்காலம் முதல் தொண்டால் பொழுதளந்த மிகச்சிறந்த காந்தியவாதியான குமரி அனந்தன் தமது இறுதி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர். அவரது மறைவு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாகும். இரா.முத்தரசன்:- “பனை தொழிலாளர் வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்து, பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். சாதி, மதவெறி, வகுப்புவாத கொள்கைகளுக்கு எதிராக சமரசம் காணாது போராடி வந்த ஜனநாயகவாதி. நாட்டுப்பற்றும், மக்கள் நலனும் இருகண்களாக கொண்டு வாழ்ந்த, அப்பழுக்கற்ற தேச பக்தரை நாடு இழந்து விட்டது.
நாம் தமிழர் சீமான்:
கேளாதாரும் வேட்ப மொழியும் சொல்வன்மை கொண்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் கரை கண்டு, நல்லாட்சி நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்ளிட்ட 29 அருந்தமிழ் நூல்களை இயற்றிய இணையற்ற தமிழ்ப் பேரறிஞர். அன்புமணி ராமதாஸ்:- “என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டிருந்தவர். அண்மையில் கூட, உடல் நலிவடைந்த நிலையிலும் என்னுடன் தொலைபேசியில் பேசிய குமரி அனந்தன், தமிழகத்தில் எப்படியாவது மதுவை ஒழித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஜி.கே.வாசன்:-
தனது அரசியல் பணியாலும், மக்கள் பணியாலும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி, தான் சார்ந்த தொகுதிக்கும், தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். டி.டி.வி. தினகரன்:- தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
17 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2025
17 Apr 2025 -
அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
17 Apr 2025மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
-
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவரை நியமிக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
17 Apr 2025புதுடெல்லி, அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்
-
தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
17 Apr 2025சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவு
17 Apr 2025பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அ.தி.மு.க.
-
அமலாக்கத்துறை விசாரணைக்கு 3-வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர்
17 Apr 2025அரியாணா: 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜரானார் .
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
9-வது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
17 Apr 2025புவனேஸ்வர், ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 9-வது முறையாக நேற்று (வியாழக்கிமை), புவனேஸ்வர
-
சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் அதிநவீன தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Apr 2025சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் சிபி நிறுவனம் ரூ.1,882 கோடி முதலீட்டில் அமைத்துள்ள அதிநவீன தரவு மையத்தை முதல்வர் மு.
-
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள்:போற்றி வணங்குவதாக விஜய் பதிவு
17 Apr 2025சென்னை: தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று விஜய் கூறினார்.
-
மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்
17 Apr 2025புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார்.
-
இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
17 Apr 2025இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
-
தெலங்கானாவில் பரபரப்பு: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
17 Apr 2025ஹைதராபாத், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மிட்சல் ஸ்டார்க் யார் என்பதை காட்டிய அந்த 2 ஓவர்: அக்சர் படேல் பெருமிதம்
17 Apr 2025புதுடெல்லி: மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி 2 ஓவர்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டுகிறது என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.
-
ஆரம்ப பள்ளிகளில் இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு
17 Apr 2025மும்பை, மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை
17 Apr 2025மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பேட் பரிசோதனைக்கு ஐதராப் அணி பயிற்சியாளர் வெட்டோரி வரவேற்பு
17 Apr 2025மும்பை: வீரர்களின் பேட் சோதனை கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று ஐதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்த
-
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
17 Apr 2025திருவனந்தபுரம், வக்பு திருத்த புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.