முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர் மனுதாக்கல்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

சங்கரன்கோவில்.பிப்.24 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊர்வலமாக வந்தார். அப்போது அவருடன் கழக அமைப்பு செயலாளர் பிஎச்.பாண்டியன், தம்பிதுரை எம்பி, அமைச்சர்கள் செல்லுார் ராஜு, கோகுல இந்திரா, சுந்தர்ராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லை மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் கணேசன், மாநகர் மாவட்ட செயலாளர் சுதாபரமசிவன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர்,  முன்னாள் எம்பி முருகேசன்,கல்லுார் வேலாயுதம், தேர்தல் பணிக்குழு ஆதித்தன், பள்ளிக்கோட்டை செல்லத்துரை, விவசாய அணி செயலாளர் தச்சை கணேச ராஜா, வண்ணை கணேசன், மருதுர் சுப்பிரமணியன், பெரிய பெருமாள், தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர்கள் தச்சை மாதவன்,மோகன், ராஜன், ஹைதர் அலி,  கவுன்சிலர் ஆறுமுகம், குறிச்சி சேகர், ஹயாத், காமராஜ், பாளை ராஜேந்திரன், மணிமாலை கணேஷ் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவுர்ை நாராயணன், கரு. நாகராஜன்,மற்றும் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, நகர அம்மா பேரவை செயலாளர் அப்துல் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஆர்.எஸ்.கே.துரை சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் மாநில பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன், கோடையிடி கோவிந்தன், லட்சுமி ,சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைமை கழக பேச்சாளர் சங்கை கணபதி, முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள் ரமே';, கந்தவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.கே.கருப்பசாமி, குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பொருளாளர் மேசையா, நகர எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் அங்கப்பன்,கோவிந்தன்,ஆப்பரேட்டர் மணி, அந்தோணி, நகர அம்மா பேரவை நிர்வாகிகள் முருகன், அரிகரகருப்பையா, நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் தலைவர் செளந்தர், கோபால், நகர மகளிர் அணி நிர்வாகிகள் லெட்சுமி, ஜானகி சுப்பிரமணியன், வார்டு கழக நிர்வாகிகள் சோடா குழந்தைவேல், சொக்கலிங்கம், வேலு, சாகுல்கமீது, நுார் முகம்மது , வைரவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக மாற்று வேட்பாளராக சண்முகசுந்தரம் மனு தாக்கல்

 

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி அறிவிக்கப்பட்டு தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். பின்னர் அதிமுக மாற்று வேட்பாளராக புறநகர் மாவட்ட கழக பொருளாளர் சண்முகசுந்தரம் தனது வேட்பு மனுவை சங்கரன்கோவில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தாமோதரனிடம் தாக்கல் செய்தார் அப்போது சங்கரன்கோவில் நகர செயலாளர் கண்ணன், நகராட்சி உறுப்பினர் முத்துக்குட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்