எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 24 - சிக்கிம் பாராளுமன்ற உறுப்பினர் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை சந்தித்து தமிழக அரசு உயர்கல்விக்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து ஆலோசனை நடத்தியது. சிக்கிம் பாராளுமன்ற உறுப்பினர் ராய் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு 23.03.2012 அன்று காலை 11.00 மணியளவில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்தனர். குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் வரவேற்று உரை நிகழ்த்தினார். அவ்வுரையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு உயர்கல்விக்கு அளித்துவரும் முன்னுரிமை குறித்தும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு எடுத்துவரும் நிலைகள் குறித்தும், கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது குறித்தும் எடுத்துக் கூறினார். உயர்கல்வித்துறையை ஆற்றல்சார் மையமாக உருவாக்க முதல்வர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
தமிழக மாணவர்கள் கணினியின் வழி உலக அறிவு பெற வேண்டும் என்ற அடிப்படையில், சுமார் 10 இலட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கி வருவது குறித்தும், அதன் செயல்முறை குறித்தும் விளக்கினார். இறுதியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வியின் வளர்ச்சிக்கு எடுத்துவரும் அனைத்து வழிவகைகளையும் எடுத்துக் கூறி குழு உறுப்பினர்களை வரவேற்றார். தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்க செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விளக்கமாக அறிந்துகொள்வதற்காக இக்குழு இங்கு வந்துள்ளது. அதுபற்றி எடுத்துக்கூறினால் அதை அம்மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து முடிவெடுக்க ஏதுவாக இருக்கும் என்று குழுவின் தலைவர் ராய், கேட்டுக் கொண்டார்.
உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் ஸ்ரீதர் உரையாற்றுகையில், தமிழகம் உயர்கல்வியில் அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், கல்வியின் தரம் குறித்தும், ஆற்றல்சார் மையமாக உயர்கல்வி வளர்ந்துவருவது குறித்தும் கூறினார். உயர்மட்டக் குழுவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஜி.இ.ஆர். விகிதத்தை 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார். தமிழக முதல்வர் வெளியிட்ட விஷன் 2023 -யில் கொள்கை விளக்கை குறிப்பேடு உயர்கல்விக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமை குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். தமிழகத்தில் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வழங்கி வருவதையும் புள்ளி விவரங்களோடு கூறினார். வருடத்திற்கு ஒரு முறை தொழில்துறை சார்ந்தவர்களும் கல்வித்துறை சார்ந்தவர்களும் கூடி விவாதித்து உயர்கல்வியை வளர்க்கும் உத்திகளை வகுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்துக்களை குழு முன் விளக்கி கூறினார்.
பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறித்தும், அதன் நடைமுறை பணிகள் குறித்தும், கல்வியின் தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் எடுத்துவரும் நிலைகள் குறித்தும் விளக்கி கூறினார். பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி செயல்படுவது குறித்தும், சமூக கல்லூரி உருவாக்கி செயல்படும் விதம் குறித்தும், அதன்மூலம் மாணவர்கள் அடைந்துவரும் பலன் குறித்தும் கூறினார். தமிழக அரசும், பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு பல்கலைக்கழங்களோடு, பல்வேறு நாடுகளோடு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் கூறினார்.
தமிழக அரசின் முதன்மை நோக்கமான உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கூறினார். பாடத்திட்ட முறைமையை வளர்க்க 10 பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ரூ.1 கோடி வழங்குவது குறித்தும், அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியிருப்பது குறித்தும், மொழி ஆய்வுக்கூடம் உருவாக்குவதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது குறித்தும் விளக்கமாக கூறினார்.
பள்ளிக் கல்வித் துறையும், கல்லூரிக் கல்வித்துறையும் இணைந்து எவ்வாறு கல்வியின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பதையும் கூறினார்.
அனைத்தையும் உன்னிப்பாக கேட்டறிந்த குழு உறுப்பினர்கள் சில ஐயப்பாடுகளையும் கேட்டறிந்து தெளிவுபெற்றனர்.
கடைசியாக குழுவின் தலைவர் ராய், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த குறிப்பாக சிக்கிமில் வாழும் மாணவர்கள் உயர்கல்வி பெற தமிழக அரசு சிறப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்காக சிக்கிம் முதல்வரிடமிருந்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவதாகவும் அதை பரிசீலித்து தக்க உதவி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு உயர்கல்வியில் எடுத்து வரும் முயற்சிகளையும், நடைமுறைப்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து பாராட்டினார். குறிப்பாக சுமார் பத்து இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை ஆச்சரியத்தோடும், வியப்போடும் கேட்டறிந்து பாராட்டினார். மேலும், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரையும் உயர்கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களையும், தங்கள் மாநிலத்திற்கு வருகை புரிந்து உயர்கல்வியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கி உதவி புரியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இறுதியாக குழுவின் தலைவர் ராய் தமிழக முதல்வர் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை கூடுதல் செயலர் ஆகியோருக்கும் சிக்கிம் அரசு சார்பாகவும் குழு சார்பாகவும் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.