எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் பொதுமக்களும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதுதவிர திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியிலும் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில் 3ம் நாள் தன்னுடைய தேர்சல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மாலை 5.15 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து துவங்கினார். அங்கிருந்து ஐயப்பன் கோவில், அரசு தலைமை மருத்துவமனை வழியாக 5.25 மணிக்கு திருச்சி புத்தூர் நாலுரோடு வந்தடைந்தார். முன்னதாக அந்த பகுதியில் மதியம் 2 மணியில் இருந்து அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி ஜெயலலிதாவை வரவேற்க காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து புத்தூர் நாலுரோட்டில் இருந்து ஜெயலலிதா மூன்றாம் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசியதாவது:-
நபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழக மக்கள் திமுக ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று தரும் தேர்தல் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் 9 முறை விலை உயர்த்தப்பட்டது. விலைவாசியும் குறையவில்லை. மணல் கொள்ளை இன்னமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கருணாநியின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. அதேபோல் கிராணைட் கொள்ளை மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு பதிலாக மின்வெட்டு பெருகிவிட்டது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் இந்தியாவிலேயே தன் மக்களுக்கு கோடி கோடியாக சம்பாதித்த ஒரே முதல்வர் கருணாநிதி.
தமிழக முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்படுகின்றனர். திருச்சியை பொறுத்தவரை இங்கு உள்ளூர் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியும். அனைத்து வசதிகளுடன் கூடிய திருச்சி புதிய பேருந்து நிலையத்தை அமைத்து காட்டுவோம். பொதுமக்களுக்கும், வியாபாரிகளையும் பாதிக்காத வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். திருச்சி புத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவோம். திருச்சி ஜங்சன் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவோம். திருச்சி நகரில் குடிnullநீர் பிரச்சனைகளை தீர்ப்பதோடு தரமான சாலை வசதிகளை செய்வோம். போக்குவரத்து இடையூறுகளாக திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் பகுதி, தலைமை தபால் நிலையம், மெயின்காட்கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
அமைச்சர் நேருவின் அட்டகாசத்தால் nullநீங்கள் பாதித்து இருப்பதை நான் நன்கு அறிவேன். நேரு அவரது சகோதரர் ஆகியோருக்கு தெரியாமல் திருச்சி மாவட்டத்தில் யாரும் இடத்தை வாங்கி பதிவு செய்ய முடியாது. அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நேருதான் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நேருவை தோர்கடிக்க செய்வீர்களா? (செய்வோம் செய்வோம் என தொண்டர்கள் கோஷமிட்டனர்) திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒடுக்கீடு அளிப்பதாக கருணாநிதி கூறினார். ஆனால் அதை நடைமுறையில் அமுல்படுத்த வில்லை. உங்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் அதோடு இஸ்லாமியர்களின் அணைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும். விலைவாசி உயர்வு குறைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும். உங்களுடைய உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் அதோடு அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொதுமக்களாகிய உங்கள் பணத்தைதான் சுரண்டி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை கொடுப்பார். அந்த பணத்தை nullநீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் மனசாட்சி எப்படி சொல்கிறதோ அப்படி செய்யுங்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் திருமண உதவித்தொகையான ரூபாய் 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அதேபோல காற்றாடி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்படும். அதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கப்படும் ரூபாய் 500 உயர்த்தி 1000 ரூபாயாக வழங்கப்படும். கரும்பு டன் கொள்முதல் 2500 உயர்த்தி தரப்படும். 11ம், 12ம் வகுப்பு ஆகிய படிப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கம்யூட்டர் வழங்கப்படும். கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
பால் உற்பத்தியை பெருக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சுயஉதவிக்குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். 58 வயது மேற்பட்டவர்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு 300 சதுர அடியில் நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். நிலமற்றவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இந்த மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மரியம்பிச்சை நிறுத்தப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
அதைதொடர்ந்து திருச்சி தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர் வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஜெயலலிதா சென்றார். அங்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரனை ஆதரித்து ஜெயலலிதா வரலாறு காணாத கூட்டத்தில் பேசினார். முன்னதாக திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கைகளில் கொடிகலை ஏந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.