எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிம்லா, நவ. - 5 - இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது. துவக்கத்தில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு போகப் போக விறுவிறுப்பானது. இந்த தேர்தலில் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா, அல்லது காங்கிரசா என்பது டிசம்பர் 20 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இம் மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன. இரண்டு கட்சிகளுமே மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. பகுஜன் சமாஜ் கட்சி இந்த தேர்தலில் 66 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து இமாச்சல் லோஹித் கட்சி 36 இடங்களிலும், டி.எம்.சி. கட்சி 25 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 16 இடங்களிலும், இ. கம்யூனிஸ்டு கட்சி 15 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் மற்றும் 105 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இமாச்சல் பிரதேச முதல்வராக தற்போது பிரேம்குமார் துமால் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. எப்படி பஞ்சாபில் அகாலிதள பா.ஜ.க கூட்டணி மீண்டும் பதவிக்கு வந்து வரலாறு படைத்ததோ, அதே போல் இங்கும் வரலாறு படைப்போம் என்று பா.ஜ.க கூறுகிறது. ஆனால் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான அமிரீந்தர்சிங், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்று அடித்துக் கூறுகிறார். இம்மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் முதல்வர் பிரேம்குமார் துமாலும், காங்கிரஸ் சார்பில் வீரபத்ரசிங்கும் போட்டியிடும் முக்கிய புள்ளிகளாவர். இரு தரப்பினருமே ஊழலை பற்றி பேசியே ஓட்டுக் கேட்டனர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 459 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 27 பேர் பெண்களாவர். இந்த தேர்தலுக்காக மொத்தம் 7,253 வாக்குச் சாவடிகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 20 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. அப்போது இந்த கட்சிக்கு 41 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 23 இடங்கள் கிடைத்தன. சுயேட்சைகள் 3 இடத்தில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2007 ல் நடந்த தேர்தலின் போது இம்மாநிலத்தில் 71.61 சதவீத வாக்குகள் பதிவாயின. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 68.36 சதவீதம் ஆகும். பெண் வாக்காளர்கள் 74.01 சதவீதமாகும். நேற்றைய தேர்தல் துவங்கிய போது வாக்குப் பதிவு ஆரம்பத்தில் மிக மிக மந்தமாக இருந்தது. பிறகு போகப் போக சூடு பிடித்தது. நண்பகல் 12 மணிக்குள் 30 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆனால் ஆரம்பத்தில் அதாவது முதல் இரண்டு மணி நேரத்தில் வெறும் 10 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது. பிறகு வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரீந்தர் சவுகான் தெரிவித்தார். ஹமீர்பூர், மாண்டி, சிம்லா, சோலன், காங்ரா ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு அதிகபட்சமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் துவங்குவதில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். வாக்குப் பதிவு நேற்று மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவரும், 5 முறை முதலமைச்சராக இருந்தவருமான வீரபத்ரசிங், ராம்பூர் டவுனில் தனது சொந்த ஊரில் வாக்களித்தார். தற்போதைய முதல்வர் பிரேம்குமார் துமால் சமீர்பூர் என்ற இடத்தில் தனது வாக்கை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் வீரபத்ரசிங் சிம்லா ரூரல் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பிரேம்குமார் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மாவும் தலைநகர் சிம்லாவில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷர்மா, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். இது எங்களது நம்பிக்கை என்று தெரிவித்தார்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் இன்டக்சன் ஸ்டவ் கொடுப்போம் என்று பா.ஜ.க உறுதியளித்துள்ளது. இவற்றை வாங்க யார் பணம் கொடுப்பார்கள்? பாரதீய ஜனதா கொடுக்குமா? வாக்காளர்களை திசை திருப்புகிறது பா.ஜ.க என்றும் ஆனந்த் ஷர்மா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த தேர்தலில் 95 வயதான முதியவர்களும் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 20 ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது வெற்றிப் பெறப் போவது பா.ஜ.கவா, காங்கிரசா என்பது தெரிந்து விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்