முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திக்விஜய்சிங் மீது நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை, நவ.15 - திக் விஜய்சிங் மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக நடிகை ராக்கி சவந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த கெஜ்ரிவால் காங்கிரஸ் தலைவர்கள் மீதும், மத்திய அரசு மீதும் அடுக்கடுக்கான ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கருத்துக்கூறும் போது கெஜ்ரிவாலும், கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த்தும் ஒன்று தான். இருவரிடமுமே எதுவுமே இல்லாமல் பெரிதாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள் என்றார். அவருடைய இந்த கருத்தைக் கேட்டு கவர்ச்சி வீராங்கனை ராக்கி சவந்த் அதிர்ச்சியடைந்தார். தன்னைப் பற்றி இல்லாததை விமர்சித்த திக் விஜய்சிங் மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ராக்கி மேலும் கூறியதாவது, திக் விஜய்சிங்கின் கருத்து பெண்மைக்கு கலங்கம் கற்பிப்பதாக உள்ளது. இதனால் நான் அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். என்னை இழிவு படுத்தி பேசிய திக் விஜய்சிங் மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன். இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எனது வக்கூலிடம் தெரிவித்துள்ளேன் என்றார். மேலும் மும்பை போலீஸ் கமிஷனர் மற்றும் மராட்டிய உள்துறைச் செயலாளருக்கும் திக் விஜய் மீது புகார் மனுக்களை அனுப்பியுள்ளேன். இதற்கிடையே தனது பேச்சிற்காக திக் விஜய்சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இதுகுறித்து திக்விஜய் சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, நான் ராக்கி சவந்த்தை மட்டமாக பேசவில்லை. உண்மையில் நான் அவருடைய ரசிகன் ஆவேன். ராக்கி என்னை மன்னிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்