முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 பவுன்நகை திருட்டு: வேலைக்காரிகள் மீது நடிகைசச்சு புகார்

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, டிச.- 2 - தன்னுடைய வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு போனதாக நடிகை சச்சு போலீசில் புகார் கூறியுள்ளார். காதலிக்க நேரமில்லை உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை சச்சு. கதாநாயகி மற்றும் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 1 வருடமாக நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் உள்ளது.வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் உள்ளனர். இதில் யார் நகைகளை திருடினார்கள் என்று தெரியவில்லை. சுமார் 40 பவுன் நகைகளும், 1 1/2 கிலோ வெள்ளிப் பொருட்களும் திருட்டு போய் உள்ளதாக தெரிகிறது. இதுபற்றி நடிகை சச்சு போலீசில் வாய்மொழியாக முதலில் புகார் கூறி இருந்தார். போலீசார் விவரமாக என்னென்ன நகைகள் திருட்டு போனது என்று எழுதி கொடுக்குமாறு நடிகை சச்சுவிடம் கேட்டிருந்தனர். அதன்படி அவர் திருட்டு போன நகைகளின் விவரத்தை அபிராமபுரம் போலீசாரிடம் நேற்று முன்தினம் விவரமாக புகாராக எழுதி கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளனர். இதையொட்டி நடிகை சச்சுவின் வீட்டிற்கு சென்ற போலீசார் நகை திருட்டு போன பீரோ, வேலைக்கார பெண்கள் வந்து செல்லும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகை பதிந்துள்ளதா? என்று ஆராய்ந்தனர். நேற்று வேலைக்கார பெண்களை விசாரணைக்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்கள் அபிராமபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், விரைவில் நகைகளை மீட்டு நடிகை சச்சுவிடம் ஒப்படைப்போம் என்று தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்