எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - குடகுவிட்டுக் குதித்து வரும் காவிரியை அடகுவைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை சரி செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-
சென்னை, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-
அரசியலில் நான் அடியெடுத்து வைத்து முப்பது வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், அந்த முப்பது வருடங்களில் இருபத்தைந்து வருடங்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று கழகத்தை வழி நடத்தி வருகிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது.
என்னுடைய அரசியல் பயணத்தில், பல்வேறு இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும், சோதனைகளையும் நான் சந்தித்த போது, எனக்கு உறுதுணையாக இருந்து நீங்கள் காட்டி வரும் பாசத்திற்கும், பரிவிற்கும், அன்பிற்கும், எனது நன்றியைத் தெரிவித்து, இந்தத் தருணத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டுவரும் இந்த 25 ஆண்டு காலத்தில் கழகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, உண்மையிலேயே வியப்பாகத் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்னை கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்த போது, நான் தினந்தோறும் தலைமைக்கழகம் செல்லுவேன். உங்களுக்கு எல்லாம் தெரியும். அப்போது கழகத்தின் வங்கிக் கணக்கில் ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை. ஆனால், இன்று நம்முடைய தலைமைக் கழகக் கணக்கில் வைப்பு நிதி மற்றும் 118 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 530 ரூபாய் அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், இது வளர்ச்சி இல்லை என்றால் வேறு எது தான் வளர்ச்சியாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, 1986ஆம் ஆண்டு அப்போது எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது தலைமைக் கழகத்தில் அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அன்றைய தினம் கழகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 லட்சம். ஆனால் இன்று உண்மையாகவே கழகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம் ஆகும். இத்தயை ஒரு வளர்ச்சியை வேறு எந்த அரசியல் இயக்கமும் இந்தியாவிலேயே கண்டிருக்க முடியாது என்பதை நான் திட்டவட்டமாகச் சொல்லுவேன்.
ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கி சீரழிக்கப்பட்ட தமிழகத்தை, தமிழக மக்களின் துணை கொண்டு மீட்டோம். அப்படி மீட்ட தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாய் மாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு நம் பயணத்தை நாம் வெற்றிகரமாகத் தொடர்கிறோம். ஆனால், அதற்கு சவால் விடுக்கின்ற விதத்திலே எத்தனையோ தடைகள் நம் முன்னே எதிர் வந்து நிற்கின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஒரு புறம் ஐந்தாண்டு கால மைனாரிட்டி திமுக ஆட்சியால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டு வருவது; மறு புறம் வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்ல சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு கடமையாற்றுவது என; எனது தலைமையிலான கழக அரசு போராடி வருகிறது. அதே வேளையில், மத்தியில் ஆளும் கருணாநிதி முட்டுக் கொடுத்து தாங்குகின்ற மத்திய அரசு, எத்தனை வகைகளில் முட்டுக்கட்டை போடுகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள்.
காவேரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு விவகாரம்; தமிழகத்திற்கான அரிசி, மண்ணெண்ணெய், எரிவாயு, கூடுதல் நிதி போன்ற அனைத்து கோரிக்கைகளிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், தமிழக மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகின்ற முனைப்பில் நாம் வெகுவான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
பேரறிஞர் அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும், என்னையும், அரசியல் உலகத்திற்கு அளித்திட்ட கலை உலகத்தைக் காத்தது உங்கள் அன்புச் சகோதரி தலைமையிலான கழக ஆட்சி தான். இப்படி, வெள்ளித் திரையை மீட்ட நாம், கருணாநிதியின் குடும்பக் கொள்ளையில் இருந்து தமிழக மக்களைக் காக்க அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து; அதன் வழியே தமிழக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேனல்களை வழங்கி வருவதைப் போலவே; சென்னை மாநகருக்கும் வழங்குவதற்கு முயற்சிக்கும் நிலையில், தங்களது குடும்ப நிறுவனங்களின் மூலம் தங்களது ஏகோபித்த உரிமையை நிலை நிறுத்திட, மத்திய காங்கிரஸ் அரசைக் கொண்டு முட்டுக்கட்டைப் போடுவதையும்; அதனை உடைத்தெறிய உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் போராடி வருவதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதனை மத்திய அரசு, மத்திய அரசிதழில் வெளியிட முன்வராத சூழ்நிலையில், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் இதை வெளியிட, தான் தாங்கி இருக்கும் மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தாத சூழ்நிலையில்; இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதே காவேரியில் நமக்குரிய பங்கை உறுதி செய்யும் என்பதால், நான் அது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். எனினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், எனது ஆணையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதன் மூலம், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் தடுக்கும் நோக்கில் மறைமுக வேலைகளை செய்து வருகிறார் கருணாநிதி.
இருப்பினும், குடகு விட்டு குதித்து வரும் காவேரியை அடகு வைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை நான் நிச்சயம் சரி செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாக்களித்த மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை இம்மியும் குறையாமல் நிறைவேற்றும் விதமாக மாணவச் செல்வங்களுக்கு மடிக் கணினி; இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், ஃபேன்; வறுமையின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கும் ஏழைஎளிய பாமர மக்களை மீட்டெடுக்கும் விதமாக கறவை மாடு, ஆடுகள் என பின்தங்கிக் கிடக்கும் மக்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை, மீட்டெடுக்கும் வகையிலான மீட்சி நடவடிக்கைகளாக இந்தத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
விலையில்லா அரிசி; தாலிக்கு தங்கம்; மீன்பிடி தடைக்கால உதவித் தொகை இரட்டிப்பு; முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை இரட்டிப்பு என
ஒரு கனிவுள்ள அரசாங்கமாக, எளியோரின் பாதுகாவலராக நம் கழக அரசு திகழ்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமும்; தமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவும்; லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறோம். அதுவும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல் முறையாக தகுதித் தேர்வுகளை முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையாக நடத்தி, இளைஞர்களின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறோம்.
மேலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட அனைத்து வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரே நாளில் பிரபலமான
12 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட புரட்சிகளையும் செய்திருக்கிறோம். ஆக, அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளும்; வறுமையைப் போக்கும் திட்டங்களும் ஒரு புறம் என்றால்; அதே வேளையில், பள்ளிக் கல்வித் துறைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு நிதியாண்டிற்கு மட்டுமே 14,553 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கல்லாமையை நீக்குகிற அரசாக; அறிவொளியை ஏற்றி வைக்கிற அரசாக; உங்கள் அன்புச் சகோதரியின் அரசு திகழ்கிறது என்பதிலும் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.
ஆக, கல்லாமை நீக்கி; இல்லாமை போக்கி; இவை இரண்டோடு வேலை இல்லாமையையும் அடியோடு அகற்றி; தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்து இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் மாற்றுவதற்கு உழைத்து வரும் கழக அரசின் சாதனைகளை தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.
அது போலவே, கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி சீரழித்த ஆவினை, அடியோடு மீட்டுவிட்டோம். போக்குவரத்துத் துறையை பொறுப்போடு மீட்டிருக்கிறோம். அதனால் இன்று புதுப் புது பேருந்துகள் தமிழகமெங்கும் வலம் வந்து மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றன.
இவ்வளவு சாதனைகளை நாம் நிகழ்த்தி இருந்தாலும், தமிழ் நாட்டு மக்களை பாதிப்படையச் செய்துள்ள பிரச்சனை மின் பற்றாக்குறை என்பதை நான் அறிவேன். முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட மின் பற்றாக்குறையினை நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் நான் எடுத்து வருகிறேன். மிக விரைவில் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சீர் செய்யப்படும். எனது முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலவே தமிழகத்தை, மிகை மின் உற்பத்தி மாநிலமாய் விரைவில் மாற்றிக் காட்டுவேன். 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
இந்தப் பிரச்சனையைப் பற்றி கழக உடன்பிறப்புகள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, மக்கள் மத்தியில் பேசுகின்ற போது, எளிமையான ஒரு கருத்தை எளிதில் புரியக் கூடிய ஒரு கருத்தை அனைவரும் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று கடுமையான மின்பற்றாக்குறை தமிழகத்தில் நிலவுகின்றது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் காரணம்? 2006ல் முதலமைச்சர் பதவியை விட்டு நான் செல்லுகின்ற போது தமிழ் நாடு மின்சார உற்பத்தில் உபரி மாநிலமாக இருந்தது, மின் மிகை மாநிலமாக இருந்தது. மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது பார்த்தால் தமிழ் நாடு மின் குறை மாநிலமாக இருந்தது. ஆகவே, இதற்கு நாம் எப்படி காரணமாக இருக்க முடியும்? என்னுடைய அரசு எப்படி காரணமாக இருக்க முடியும்? இடையில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டது யார்? கருணநிதி அல்லவா, திமுக மைனாரிட்டி ஆட்சி அல்லவா? ஆகவே, இன்று நிலவும் இந்தக் கடுமையான மின்பற்றாக்குறை நிலைமைக்கு முழு பொறுப்பு, முழு காரணம் திமுக அரசு தான், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தான் என்பதை அனைவரும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே
-
கால பைரவர் கோயில் மற்றும் கங்கையில் வழிபாடு நடத்தி விட்டு வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் : பா.ஜ.க. முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
14 May 2024வாரணாசி : உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகள் குறைப்பு : புதுச்சேரி அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 May 2024புதுச்சேரி : கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
என்னை கண்டு பா.ஜ.வுக்கு அச்சம்: பிரசாரத்தில் கெஜ்ரிவால் வியப்பு
14 May 2024சண்டிகர் : என்னை கண்டு பா.ஜ.வினர் அச்சமடைகின்றனர் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறினார்.
-
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
15 May 2024