எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.26 - தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்பார்த்தபடி குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் இடம்பெறவில்லை. ராசா லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த இழப்பிற்கு தி.மு.க.வை சேர்ந்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆண்டி முத்து ராசாவே முழுப்பொறுப்பு என்றும் தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளி வந்தபோது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகிலேயே நடந்த மிகப்பெரிய இமாலய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டன. இதனால் இந்த ஊழல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அடுத்து அவரது வீடுகளிலும் அவரது உதவியாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.
மேலும் இந்த ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்கை தங்களது கண்காணிப்பில் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனறு சுப்ரீம் கோர்ட்டு கட்டளையிட்டது.
இதை அடுத்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒரு நாள் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அடுத்து அவரது உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆ.ராசாவும் இரு உதவியாளர்களும் பின்னர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சி.பி.ஐ.காவலில் எடுக்கப்பட்டனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததை அடுத்து இவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இப்போதும் திகார் சிறையில்தான் உள்ளனர்.
இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு கம்பெனிக்கு கிடைத்த ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக செய்திகள் வெளியாயின.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் குறைந்த ஏலத்திற்கு 2ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி தனது துணை நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடியை கொடுத்ததாக செய்திகள் வெளியாயின.
ஆனால் இந்த ரூ. 214 கோடியை அதே கம்பெனியிடம் தாங்கள் திருப்பி கொடுத்துவிட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் கூறினாலும் கூட கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடியை அளித்தது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிர்வாக தலைவர் பல்வாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இதை அடுத்து சி.பி.ஐ. காவலில் சிறிது நாட்கள் இருந்த பல்வாவும் பிறகு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின்படி அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 80,000 பக்கங்களை கொண்ட முதலாவது குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இரண்டாவது ( துணை ) குற்றப்பத்திரிகை நேற்று இதே நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யில் 20 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு உடந்தையாக சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று இந்த துணை குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கருணாநிதியின் மனைவியும் கலைஞர் டி.வி.யில் 60 சதவீத பங்குளை வைத்திருப்பவருமான தயாளு அம்மாள் பெயர் இந்த குற்றப்பத்திரிகையில் எதிர்பார்த்தபடி இடம் பெறவில்லை.
கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும் கனிமொழிக்கு 20 சதவீதமும், அதன் நிர்வாக இயக்குனர் சரத் குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன.
ஆ.ராசா மீது லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.200 கோடி ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வாவின் பங்குதாரர் நிறுவனம் ஒன்றின் மூலமாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது என்பதை ஏற்கனவே சி.பி.ஐ, கோர்ட்டில் சி.பி. ஐ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றதாகவும் சிபிஐ. தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இபிகோ. ( இந்திய தண்டனைச் சட்டம் ) 120 பி. ( கிரிமினல் சதித்திட்டம் ) இபிகோ. 468 ( போலி மற்றும் மோசடி ) இ.பி.கோ. 471 ( உண்மையான ஆவணம் போல போலி ஆவணங்களையும் எலக்ட்ரானிக் பதிவுகளையும் பயன்படுத்துதல் ) இபிகோ. 420 ( மோசடி மற்றும் ஏமாற்றுதல் , கண்ணியமற்ற முறையில் சொத்துக்களை அனுமதித்தல் ) இபிகோ. 109 ( உடந்தையாக இருத்தல் ) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா மற்றும் 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அவர்களின் பெயர்கள் வருமாறு
முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் முன்னாள் தனிசெயலாளர் ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வா, யுனிடெக் ஒயர்லெஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, மும்பையை சேர்ந்த டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு குழும நிர்வாக இயக்குனர் கவுதம் தோஷி, இதே ரிலையன்ஸ் கம்பெனியின் இரு துணை தலைவர்களான ஹரி நாயர், சுரேந்திர பிப்பாரா, கனிமொழி ஆகியோர் உள்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்கு எடிசலாட் டி.பி. டெலிகாம் நிறுவனமும் யுனிடெக் நிறுவனமும் தகுதியற்ற நிறுவனங்களாக இருந்தன. ஆனால் இந்த நிறுவனங்களை தகுதியுள்ளவைகளாக மாற்றுவதற்காக ராசா விதிமுறைகளையே திருத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருக்கும் விதிமுறைகளுக்கு பதிலாக ராசா முன்னுரிமை பட்டியலை திருத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி கம்பெனி தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஊழல் வழக்கில் நாட்டின் உயர் மட்ட சட்ட அதிகாரியாக இருக்கும் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா யுனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான தேதியை முன் கூட்டியே ராசா தன்னிச்சையாக முடிவு செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் பிரதமரின் அலுவலகம் , சட்ட அமைச்சகம், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் ஆலோசனைகளையும் ராசா புறக்கணித்து விட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இதுவரை ஆ.ராசா, பெகுரா, சந்தோலியா, பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. இதுவரை கைதாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.