எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மீது கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெகூரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் வழக்கில் ஏற்கனவே 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று முன்தினம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், கூட்டுச் சதி செய்ததாகவும் கனிமொழி மீது அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற மே மாதம் 6 ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ்(பி.எம்.எல்.ஏ.)வழக்கு பதிவு செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீதமும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகளைக் கொண்ட கலைஞர் டி.வி.யின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழி எம்.பி. விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஏற்கனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் பெற்றவர்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.50 கோடி கைமாறியுள்ளது தொடர்பாகவும், இந்த உரிமம் பெற்றவர்களுக்கும் ஆ.ராசாவுக்கும் அதேபோல கனிமொழிக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
செசெல்ஸ் தீவைச் சேர்ந்த ஷிவா குரூப் கம்பெனி, ஹைடெக் ஹவுசிங் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகியவற்றிடம் இருந்து தி.மு.க. குடும்பத்தினருக்கு சொந்தமான கலைஞர் டி.வி. ரூ. 50 கோடியை பெற்றுள்ளது. இந்த பணப்பட்டுவாடா பல பரிவர்த்தனைகளாக செய்யப்பட்டுள்ளது. இந்த ஷிவா குரூப் கம்பெனி என்பது கடந்த 2008 ஆம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு கம்பெனிகளில் ஒன்றால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வான் டெலிகாம் கம்பெனியை நிர்வகிக்கும் டி.பி. குழுமத்தில் இருந்து கலைஞர் டி.வி. ரூ. 200 கோடியை பெற்றுள்ளது என்று சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆ.ராசாவை விசாரணைக்கு அழைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை துவக்கியபிறகு இந்த ரூ.200 கோடி பணத்தை கலைஞர் டி.வி. வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாகவும் சி.பி.ஐ. கூறியுள்ளது.
ரிலையன்ஸ் டெலிகாம் கம்பெனியின் 3 முக்கிய நிர்வாகிகளான குழும நிர்வாக இயக்குனர் கெளதம் தோஷி, இக்கம்பெனியின் இரண்டு துணைத் தலைவர்களான ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோர் மீதும் கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.