முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் அருகே 8 வயது சிறுமி கற்பழிப்பு - சாலை மறியல்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருப்பூர்,ஏப்.23 - திருப்பூர் அருகே போயம்பாளையம் கணபதி நகரில் கடந்த 12-; தேதி வீட்டில் தனியாக இருந்த 8-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார்  சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த கடலுார் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த கண்ணன் (வயது 23) என்பவரை கைதி செய்தனர்.  

        பாதிக்கப்பட்ட சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

   தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை அதே நிலயில் இருந்து வந்தது இரத்த கசிவு இருப்பதாக பெற்றோர்கள் கூறினார்கள். அரசியல் கட்சிகள், சமூக சேவை அமைப்புகள், பொதுமக்கள் சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் உடல்நிலை குறித்து டாக்டரிடம் விசாரித்தார். மேலும் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

     இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க கோரியும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக சேவை அமைப்புகள், போயம்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து நேற்று கடை அடைப்புக்கு நடத்தப்பட்டது. திடீரென்று போயம்பாளையம் நால்ரோட்டில் சாலை மறியலில் ்டுபட்டனர். இதனால் திருப்பூர் - பெருமாநல்லுார் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு டி.எஸ்.பி.ராஜாராம், திலுப்பூர் வடக்கு டி.எஸ்.பி.மாரிமுத்து ஆகியோர் மறியலில் ்டுபட்டவரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்தனர் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி பரபரபாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்