எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.27 - இலங்கை தமிழர் பிரச்சனை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க கடும் முயற்சி, பசிபோக்கும் திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக நிறைவேற்றிவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. மன்றக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலக வரலாற்றில் இந்த நூற்றாண்டு கண்டிராத வகையில் ஒரு இன அழிப்பு கொடூரத்தை இலங்கை தமிழர்கள் மீது ஏவி விட்ட சிங்கள இனவாத அரசை தட்டிக் கேட்கவும், போர்க்குற்றம் விசாரிப்பும், பொருளாதார தடையையும், இலங்கைக்கு எதிராக கொண்டுவர வேண்டும் எனும் கம்பீர குரல் எழுப்பி, உலகத் தமிழினத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து இலங்கை அரசு ஒரு சார்பு நிலையோடு மீள் குடியேற்றம் எனும் பேரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்துவதையும்,
தமிழனத்தின் மீதான ஒரு இன சிதைவை நடத்தி வருவதையும், கடுமையாக கண்டிக்கும் விதமாக, இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தமிழர்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப தனி ஈழம் குறித்தான முடிவுகளை ஐநாவும், சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், இதற்கு இந்திய துணைக் கண்டம் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் புனிதமிக்க சட்டமன்ற பேரவையில் ஒரு புரட்சிகர தீர்மானத்தை இயற்றிய உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் மனதார வாழ்த்தி உளமார வரவேற்று, இத்தகைய சுழைலில் மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்குகிற இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் தமிழக ஐபிஎல் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்று திடத்தோடு அறிவித்தும், இதற்கு முன்பே இலங்கை பங்கேற்கும் தெற்காசிய தடகள விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியாது என ஆண்மை திறத்தோடு அறிவித்தும், தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி அத்துமீறி தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் உடமைக்கு சேதம் விளைவித்து இதுவரை சுமார் 700 மீனவர்களை படுகொலை செய்திருக்கும் இலங்கை கடற்படை ராணுவத்தினருக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி அளிப்பது, கடைந்தெடுத்த கோழைத்தனம், கடும் கண்டனத்திற்கு உரியது என்பதையெல்லாம், வன்மையாக கண்டித்து, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கும் தமிழகத்தின் கம்பீர முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.
வான்மழை பொய்த்தாலும், வாஞ்சை கொண்ட தாய் மனம் பொய்க்காது எனும் விதமாக தொடர்ந்து பருவகாலம் பொய்த்து விட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சியால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் விவசாய பெருமக்களுக்கு, உதவிக்கரம் நீட்டும் உன்னத நோக்கோடு காவிரி படுகை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்து விவசாய பெருங்குடி மக்களும், இதுவரை இந்திய தேசத்தில் எந்த மாநிலமும் வழங்கிடாத அளவில் வறட்சி நிவாரணம் வழங்க ஆணையிட்டிருக்கும், கனிவுமிகு தாயின் வள்ளல் மனத்தையும், வாரி வழங்கும் தயாள மனத்தையும், இந்த மாமன்றம் வரவேற்று போற்றுகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் போதிய கவனம் செலுத்தாததால் மிகை மின் உற்பத்தி மாநிலமாக இருந்த தமிழகம், மின் பற்றாக்குறை மாநிலம் என்கிற நெருக்கடியை எதிர்கொண்டு அறிவிக்கப்பட்டடிஅறிவிக்கப்படாத மின் வெட்டுகளை கடந்த 5 ஆண்டு காலமாக எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தைப் போலவே மிகைமின் உற்பத்தி மாநிலமாக தமிழகத்தை மீட்டெடுக்க கண் துஞ்சாது கடமையாற்றிவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த மாமன்றம் நெஞ்சார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மின் பற்றாக்குறையை போக்கிட புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்கவும், மின் பற்றாக்குறையை நீக்கிட நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்திட திட்டமிட்டும், மாற்று முறை மின்சார உற்பத்தியை பெருமளவில் ஊக்குவிக்கும் விதமாக, சுரிைய ஒளி மின்சார உற்பத்தியை மக்கள் இயக்கமாக மாற்றிட மானியம் வழங்கி மக்களை ஊக்குவித்திட மதி நுட்ப முடிவுகளை மேற்கொண்டுவரும் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.
வயிறார சோறிடுதல் வேண்டும் இங்கு வாழும் மக்களுக்கெல்லாம் என்று பாடிய பாரதியின் கூற்றைப் போன்று, அதனை வாழும்போதும், வாழ்ந்த காலத்திற்கு பிறகும் மேற்கொண்டு வரும் வள்ளலாராகவும், பசியைப் போக்கும் திட்டங்களை பள்ளிகளில் சத்துணவாக பகவான் உறையும் ஆயைங்களில் அன்னதானமாக, இல்லங்கள் அனைத்திற்கும் 20 கிலோஅரிசியை விலையில்லாது வழங்கிவரும் அன்னலெட்சுமியாம், முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு வாழ்த்துகிறது.
ஏழைஎளிய பாட்டாளி மக்களும், நடுத்தர வர்க்கமும், பெருமளவில் பசியாறி பயனுறும் வண்ணம் சென்னை பெருநகரெங்கும் அனைத்து வார்டுகளிலும், 200 அம்மா மலிவு விலை உணவகங்களை தமது பொற்கரங்களால் தொடங்கி வைத்து பசியெனும் பிணி தமிழகத்தில் எல்லைக்குள்அறவே இல்லை என்பதை தலைநகர் சென்னையின் வாயிலாக இத்தரணிக்கே எடுத்துரைத்து வரலாற்றில் யுக புரட்சி வடித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் களிப்போடு பாராட்டுகிறது.
நாடெங்கும், வாட்டி வதைக்கும் வறட்சி ஒரு பக்கம், வான்மழை பொய்த்ததால் அல்லல் உறும் உழவுத் தொழில் மறுபக்கம், பெட்ரோல், டீசல், எரிவாயு, ரயில்வே பயணக்கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் என மத்திய அரசின், தொடர்ந்த விலையேற்றங்களால் நடுத்தர ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்களை, வாழ்க்கை போராட்டங்களை கனிவோடு கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விலிருந்து அடித்தட்டு மக்ளை காப்பாற்றும் நோக்கோடு, அமுதம் கூட்டுறவு உணவுப்பொருள் வினியோக அங்காடிகளில் தரமான அரசி ஒரு கிலோ ரூ.20டி க்கு வழங்கிட ஆணையிட்டிருக்கும் அம்மா அவர்களை இல்லங்கள் அனைத்தும் உள்ளம் குளிர வாழ்த்துகின்றன.
அந்த வாழ்த்தொலிகளோடு இந்த மாமன்ற உறுப்பினர்களின் கரவொலிகளும் நன்றிப் பெருக்கோடு கைகோர்க்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை தன் வாழ்வியல் அரிச்சுவடியாய் கொண்டு பற்றற்ற துறவியாய், தூய தொண்டுள்ளத்தோடு பொது வாழ்க்கை புனிதத்துக்கு இலக்கணமாக துருதுருத்த பணிகளால் தூங்காத விழிகள் கொண்டு தமிழகத்தை வழிநடத்தியும், தாய்நாட்டில் தமிழ் நாட்டை தலைநாடாய் ஆக்குவதற்கு தன்னை மெய் வருத்தி உழைக்கும் நம் அன்னைத் திருமகளாம் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் நெஞ்சாரப் போற்றி நிறைவுள்ளத்தோடு பாராட்டி வாழ்த்துகிறது.
அம்மாவின் லட்சியங்கள் அனைத்திற்கும் உறுதுணையாய் நின்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாத தடத்தில் தூய்மையோடு பணியாற்றிட, சென்னை பெருநகர மாநகராட்சி உளமாற உறுதி ஏற்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி