எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஆ.ராசாவுக்கு பாராளுமன்ற பொதுகணக்குக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தி.மு.க. வை சேர்ந்த ராஜா, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடான வகையில் ஏலம் விட்டு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறு சிறு தகவல் தொடர்பு கம்பெனிகள் மற்றும் வெறும் பெயரளவில் உள்ள நிறுவனங்களுக்கை அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 3 ஆயிரம் கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பணத்தை பினாமி பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தனது மனைவி பெயரில் துபாய் உள்பட அரபு நாடுகளில் உள்ள வங்கிகளிலும் இதர தொழிலதிபர்கள் மூலமாகவும் முதலீடு செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆ.ராசா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, ராசாவின் தனி செயலாளராக இருந்த சந்தோலியா, ஸ்வான் கம்பெனி புரமோட்டர் பல்வா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களும் பல கம்பெனிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரதிய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. ஆக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மும்முனை விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்திய பாராளுமன்ற பொதுகணக்குக்குழு வரைவு அறிக்கையை மிகப்பெரிய அளவில் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையின் நகல் குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆய்வுக்கு விடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கண்டனத்திற்கு குழுவில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். பொதுகணக்குக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதத்திற்கு வைக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் ஆ.ராசா மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், ப.சிதம்பரத்திற்கும் அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மத்திய கேபினட் செயலாளருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடுவதில் சரியான நடவடிக்கையை பிரதமர் அலுவலகம் எடுக்கவில்லை என்பதோடு பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த விஷயத்தை ஓரம் கட்டியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு விவகாரத்தை எழுப்பி,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அப்படியே முடித்துவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிபாரிசு செய்ததாக கூறப்படும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் குழு கடுமையாக தாக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் பிரதமர் அலுவலகம் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டது. இதனால் ஸ்பெக்ட்ரத்தை ஆ.ராசா தன்னிச்சையாகவும், நியாயமற்ற முறையிலும் விதிமுறைகளை மாற்றி முறைகேடான வகையில் ஏலம் விடுவதற்கு பெரும் உதவியாகப்போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கும்படி கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி தன்னுடைய அலுவலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளது. முறைகேட்டை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை. இது ராசாவுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக அனுமதியாகும். இதை பயன்படுத்தி ராசா தனது இஷ்டம்போல் கமிஷனும் லஞ்சமும் வாங்கிக்கொண்டு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டுள்ளார் என்றும் அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை ராசா விட்டுள்ளார். மேலும் தொலைதொடர்புத்துறை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆ.ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை ராசா புறக்கணித்தது பெரும் கவலையை அளிக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதுபற்றி பரிசீலனைதான் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஏலம் விடுவதற்கு தொலைதொடர்பு கமிஷனும் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் சிபாரிசு செய்யவில்லை என்ற பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியும் அதை ராசா கேட்காமல் பிரதமருக்கு தவறான வழியை காட்டியுள்ளார். மேலும் உண்மையில் பாதியை கூறியும் பாதியை மறைத்தும் ராசா கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து சட்ட அமைச்சகமானது அதிகாரம் உள்ள அமைச்சர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று குழுவுக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பது நம்பகத்தனமாக இல்லை. சட்ட அமைச்சகம் கூறிய ஆலோசனைகள் பிரதமர் அலுவலகத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் தகவல்தொடர்பு அமைச்சர் அதை மீறி செயல்பட்டதால் அதிகாரம் உள்ள கேபினட் அமைச்சர்கள் குழுவை பிரதமர் அலுவலகத்தால் அமைக்க முடியவில்லை என்று அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய பொதுக்கணக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப