முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது அணி குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசிக்கப்படும்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை.2 - 3-வது அணி குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசிக்கப்படும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறினார்.கொல்கத்தாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பா.ஜ.க.வுக்கோ பெரும்பான்மை கிடைக்காது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவை நம்பிக்கையுடன் எழுச்சி பெறும். 3-வது அணி குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசிக்கப்படும். 

முந்தைய காலங்களிலும் தேர்தலுக்குப் பிறகே  3-நது அணி உருவானது. காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நீங்கள் 3-வது அணி குறித்து அவருடன் பேச்சு வார்த்தை  நடத்தினீர்களா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்தவில்லை. ஆனால் அவருடன் சுமுகமான உறவு உள்ளது என்று அவர் 

தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்