எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே. - 9 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி ஆகியோரது பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை மே 24 ம் தேதிக்கு நீதிபதி ஷைனி தள்ளி வைத்தார்.
உலகிலேயே இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலாகும். காரணம் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என கூறப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா, அவரது செயலாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் 5 நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான ராசா உள்ளிட்ட பலரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. இந்த டி.வியில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், இதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.பி.ஐ. சார்பில் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மே. 6 ம் தேதி சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கனிமொழி எம்.பிக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 4 ம் தேதியன்று கனிமொழி டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் 6 ம் தேதி அவர் தனிக்கோர்ட்டில் ஆஜரானார். அன்றே அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வருகிற 14 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். ஆனாலும் தினந்தோறும் நீதிமன்றம் வந்து கையெழுத்திட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 14 ம் தேதி வரை கனிமொழி கைதாக மாட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. மே 14 ம் தேதியன்று அவருக்கு பெயில் கிடைக்குமா? அல்லது ஜெயில் தண்டனை கிடைக்குமா என்பது தெரிந்து விடும்.
இந்த நிலையில் கலைஞர் டி.வியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயர் சி.பி.ஐ. குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியை சேர்த்திருக்கும் போது 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதில் புலனாய்வுத் துறை பாரபட்சம் காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் பெயரையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் பொதுநலன் கருதி ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் எம். பர்குவான் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதில் கூட மத்திய புலனாய்வு துறை பாரபட்சம் காட்டுகிறது என்று பர்குவான் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி வரும் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியா மற்றும் டாடா சன்ஸ் நிறுவன சேர்மன் ரத்தன் டாடா ஆகியோரது பங்கு குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி காசியாபாத்தை சேர்ந்த தர்மேந்தர் பாண்டே என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் 24 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே தயாளு அம்மாளை சேர்க்க வேண்டும் என்று கோரும் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தயாளு அம்மாளை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருக்கும் டாக்டர் முகமது பர்குவான் தான் ஒரு பத்திரிக்கையாளன் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனில் அம்பானியை இந்த வழக்கில் சேர்க்காத விஷயத்தில் சி.பி.ஐ. செய்துள்ள குறைபாடுகளையும் பத்திரிக்கையாளர் பர்குவான் சுட்டிக் காட்டியுள்ளார். ரிலையன்ஸ் குழும அதிகாரிகளான கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா மற்றும் ஹரிநாயர் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு இவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் எல்லாம் அந்த கம்பெனியில் ஒரு சாதாரண ஊழியர்கள். அனில் அம்பானிக்கு தெரியாமல் அல்லது அவரது சம்மதம் இல்லாமல் இவர்களால் எந்த குற்றத்தையும் செய்திருக்க முடியாது என்றும் டாக்டர் பர்குவான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அனில் அம்பானியையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் பர்குவான் கோரியுள்ளார்.
ஆனால் சி.பி.ஐ. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கலைஞர் டி.வியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன. அவரது டி.வியின் இயக்குனராவார். ஆனால் குற்றப்பத்திரிக்கையில் இவரது பெயர் விடுபட்டுள்ளது. புலனாய்வு துறை(சி.பி.ஐ.) குற்றவாளிகளை தேர்ந்தெடுக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது என்றும் பர்குவான் தனது மனுவில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மையம் என்ற அமைப்பை பற்றியும் இவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மையம் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ள அவர், இந்த அமைப்புக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலையும் தனது மனுவுடன் இணைத்துள்ளார். இவ்வாறு பணம் கொடுத்த கம்பெனிகளில் சில, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உரிமம் பெற்ற கம்பெனிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்கும் போது தயாளு அம்மாள் பெயர் விடுபட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியையும் சேர்க்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் பர்குவான் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 ம் தேதி நடைபெறும் என்று சி.பி.ஐ. நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்