எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை பிப்-23 - நெல்லை மாவட்டத்திலிருந்து லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற தொழிலாளி ஒருவர் அங்கு நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் உயிரிழந்ததாகவும், மேலும் 25க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மசூதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேணடுமென்றும் அவரது உறவினர்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன்கோட்டை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் லிபியா நாட்டில் ஹோண்டாய் கம்பெனியின் மூலம் அந்நாட்டில் டவர்கள் மற்றும் பவர் கிரிடுகள் அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கு திட்ட மேலாளராக பணிபுரிந்து வரும் சங்கரன்கோவில் தாலுகா பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் ஏற்பாட்டில் அங்கு சென்று வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்தனர். இந்நிலையில் சிலதினங்களாக லிபியா நாட்டில் அரசுக்கெதிராக உள்நாட்டு கலவரத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு தகவல் தொடர்பு உள்ளிட்ட எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் எங்கும் செல்ல முடியாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு வந்த கலவரக்காரர்கள் திடிரென அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்போவதாகவும் அங்கு தங்கியிருக்கும் அனைவரும் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு தங்கியிருந்த 25க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். அப்போது அங்கு வெடித்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த சண்முக தேவர் மகன் முருகையா(40), ஆலங்குளம் அருகேயுள்ள நாகல்குளத்தை சேர்ந்த அசோக்குமார்(24), களப்பாகுளத்தை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. மற்றவர்கள் அப்பகுதியிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையே படுகாயமடைந்த முருகையா உயிரிழந்து விட்டதாகவும், மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு செல்போன்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் கடந்த சிலதினங்களாக சாப்பாடு மற்றும் குடிநீர் எதுவும் இல்லாமல் கழிப்பறை நீரை குடித்து உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களை பத்திரமாக மீட்டு செல்ல அரசை வலியுறுத்துமாறும் உறவினர்களுக்குத்தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவர்களிடமிருந்து நேற்று முன்தினம் முதல் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் யாரையும் தொடர்புகொள்ளவில்லையென தெரிகிறது. இதனால் அவர்களது தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே மசூதிக்குள் தஞ்சம் அடைந்திருப்பவர்களை பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் ஜெயராமனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அவரும் அவர்களை மீட்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் முருகையாவிற்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், கலையரசி என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.மகள் கலையரசிக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. மகன் கோபால கிருஷ்ணன் தற்போது 9ம் வகுப்பு படித்துவருகிறார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் கண்ணீர் மல்க கலெக்டரிம் தனது கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு மனுக்கொடுத்த சம்பவம் அனைவருக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.
லிபியாவிற்கு வேலைக்கு சென்றவர்கள் அனைவருமே சமீபத்தில்தான் அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அதுவும் கடன்வாங்கித்தான் வெளிநாடு சென்றுள்ளனர். எனவே அவர்களை மீட்டு தரவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணமும் வழங்கவேண்டுமன வலியுறுத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.