எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச. 18 - சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால்
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியினால் இந்தியாவிலே முதன்முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிகிச்சை பிரிவை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மருத்துவத்துறையில் முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை அமைச்சர் பட்டயலிட்டார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதுபோன்ற ஒரு பிரிவு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்படவில்லை.
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு அரசு மருத்துவமனையில் அமைத்த மாநில தமிழகம் தான். மத்திய அரசு நடத்தும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த பிரிவு உள்ளது. அதற்கு அடுத்த இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசு மருத்துவமனையில் இந்த பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை திறந்து வைத்து பேசினார். அப்போது மருத்துவத்துறையில் ஜெயலலிதா ஏற்படுத்திய புதிய சாதனைகள், திட்டங்களை பெருமிதத்துடன் எடுத்து கூறினார்.
இவ்விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:_
சென்னை மாநகரம் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார். மருத்துவத் துறையை மகத்தான துறையாக உருவாக்கி இருக்கிறார். மருத்துவ பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் ஜெயலிலதா பேசியபோது, புதிய பெல்லோஷிப் படிப்பு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று (நேற்று) இந்த புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக்க முதல்வர் ஜெயலலிதா உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறார்.
இன்று இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத அளவுக்கு இந்த பிரிவு முதன்முதலாக இங்கு துவக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உயர்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம். இன்று இந்த புதிய பிரிவு துவக்கப்பட்டதன் மூலம் ஏழை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கும். முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 240 பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் 418 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகள் ஈட்டியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை, சென்னையில் இந்த அரசு மருத்துவமனை மட்டும் 67 கோடியே 43 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இதில் 55 கோடி ரூபாய் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இந்த ஆண்டு 6511 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். கிராமப்புறங்களிலும் நல்ல சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை முதல்வர் செய்துள்ளார். அங்கும் உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை, 24 மணி நேர பிரசவ வார்டு என அனைத்து வசதியும் செய்து கொடுத்திருப்பதால் இன்று மருத்துவத் துறை வேகமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், திட்டத்தின் மூலம் இன்று குழந்தைகள் இறப்பு விகிதம் 1000_க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறக்கும் நிலை 1 லட்சத்துக்கு 73 என்ற அளவில் குறைந்துள்ளது. இதுபோன்ற மருத்துவத்துறையில் முதல்வர் ஜெயலலிதா செய்து சாதனைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
இவ்விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ்.தெய்வநாயகம் ஆகியோர் பேசினர். விழாவிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை தலைமை தாங்கினார்.
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற இணை பேராசிரியர் டாக்டர் பு.பாலாஜி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,