எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,பிப்.5 - 2ஜி் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. இந்த ஊழல் விவகாரத்தில் இருந்து கனிம மொழியை காப்பாற்ற சதிவேலைகள் நடந்ததாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் இந்த விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலையீடு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டிய அவர், தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. பல ஆண்டுகளாக அங்கம் வகித்தது. இந்த கூட்டணி அரசில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. அதில் இமாலய ஊழலாக பேசப்பட்டது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காரணம் இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.
இந்த ஊழல் தொடர்பாக அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா முதலில் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு அதிகாரிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழ எம்.பி.யும் கைது செய்யப்பட்டு 7 மாதங்களுக்கு பின் ஜாமீனில் விடுதலையானார். கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாக குற்றஞ்சாட்டப்பட்டதன் பேரில் கனிமொழி அப்போது கைதானார். கலைஞர் டி.வி.யின் இயக்குனர்களில் ஒருவர்தான் கனிமொழி. ஆனால் கலைஞர் டி.வி.க்கு பெறப்பட்டது லஞ்சம் அல்ல. அது கடன் தொகைதான். அது திருப்பி தரப்பட்டது என்று கலைஞர் டி.வி.நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்த ஊழல் விவகாரம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கும் இந்த ஊழல் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நேரத்தில் தி.மு.க. மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். ஏற்கனவே இவரது கட்சி நரேந்திர மோடி, சோனியா, சரத்பவார், போன்றவர்களை ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்து குற்றம்சாட்டி உள்ளது. இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் நேற்று டெல்லியில் சில புதிய தகவல்களை கூறி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழியை காப்பாற்ற சதிவேலைகள் நடந்ததாக பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நேரடி தலையீடு இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது. ஆனால் அது லஞ்சப்பணம் அல்ல. கடன் தொகைதான் என்பதுபோல காட்டுவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்று கூறிய பிரசாந்த் பூஷன் இதுதொடர்பாக கலைஞர் டி.வி.யின் சரத்குமார் ரெட்டி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழக உளறுத்துறை தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். கருணாநிதியின் செயலாளராக இருந்தவர் சண்முக நாதன். கனிமொழியை காப்பாற்றும் வகையில் இவர்கள் இருவரும் பேசிய உரையாடல் உள்பட 4 தொலைபேசி உரையாடல்களின் விபரங்களையும் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். கனிமொழி சம்பந்தப்பட்ட உரையாடலையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் கனிமொழியின் தொண்டு நிறுவனத்திற்கு டாடா நிறுவனம் ரூ.25 லட்சம் கொடுத்ததாகவும் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை தி.மு.க. மறுத்து உள்ளது. தி.மு.க.வின் டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவைகள் என்றும் நீதிமன்றத்தில் பூஷன் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. மீதான இந்த குற்றச்சாட்டு அக்கட்சிக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த கட்சியுடன் கூட்டு சேர பல கட்சிகள் தயக்கம் காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.