எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.29 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாடி2 அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும், எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையையும் நேற்று தொடங்கி வைத்தார்.
கையடக்கமான மின்னணு இரசீது வழங்கும் கருவி வழங்கும் திட்டம் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இக்கருவியின் மூலம் தொடர்ச்சியாக
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளையும், திருட்டு வாகனங்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த கையடக்க மின்னணு கருவியில் வாகன எண்ணை பதிவு செய்து மீறப்பட்ட போக்குவரத்து விதி, விதியை மீறிய இடம், அபராதத் தொகை, நேரம் மற்றும் தேதி ஆகிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இக்கருவியிலேயே வாகன ஓட்டிகளின் கையொப்பம் பெற்றபின் வெளிவரும் ரசீதைக் கொடுத்து அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
அடுத்த கட்டமாக கிரிடிட் கார்டு மூலம் அபராதம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இந்த கையடக்க மின்னணு கருவி சென்னை நகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த கருவியிலுள்ள தகவல்கள் அனைத்தும் சென்னை எழும்nullரில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சர்வரில் பதிவு செய்யப்பட்டு கணினி திரைகள் மூலம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருவார்கள். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இக்கருவி மூலம் உடனடி அபராதம் விதிக்கப்படும்.
எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் 20 எண்ணிக்கையில் 26 லட்சம் ரூபாய் செலவில் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் அமைக்கப்படாத இடங்களில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் பயன்படுத்தப்படும். இந்த சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி, மின்சாரம் இல்லாத பகுதிகளிலும், பாதுகாப்பு பணியின்போதும், அதிக வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த மின்னணு இரசீது வழங்கும் முறை திட்டத்தை தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மடிக்கணினி மூலம் தொடங்கி வைத்து, 10 போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் கருவிகளை வழங்கினார்.
இந்த எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகளை உபயோகப்படுத்துவதால் மின்சார இணைப்பு மற்றும் சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்படும். மேலும், சூரிய ஒளி இல்லை என்றாலும் மின்சாரம் மூலம் இதை பயன்படுத்தலாம்.
சூரிய சக்தியால் இயங்கும் எளிதில் எடுத்துச் செல்லத்தக்க இந்த போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த இரு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஈ2 காவல் நிலையத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பின்வரும் குறிப்பினை எழுதினார்.
“I am happy to launch the Electronic Challan System and the portable Traffic Signal System for the Chennai City Police today.
Technology plays an important role in administration. This technology driven initiative of the Chennai City Police will go a long way towards better enforcement of traffic rules. The utility of these systems depends on the persons who handle them. The Police, as Law Enforcement Agents, should always strive to fulfil the aspirations of the people by serving them effectively. The Police are the visual symbols of authority.
Therefore, your priority should be maintenance of Law and Order with a humane approach to the people whom you serve.”
பின்னர், அரியானாவில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை தடகளப் போட்டியில் 10,000 மீட்டர் மற்றும் 5,000 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்ற எப்2, எழும்nullர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ரகுநாத்துக்கு ரூபாய் 1 இலட்சம் ரொக்கப் பரிசும், போல் வால்ட் போட்டியில் வெள்ளி வென்ற சென்னை புற நகர ஆயுதப் படை பெண் காவலர் டி. தமிழரசிக்கு ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பரிசும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் வெண்கலம் வென்ற திருச்சிதமிழ்நாடு சிறப்பு காவல் 1-வது அணி காவலர் ஆர். வீரமணிக்கு ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பரிசும், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டிகளில் வெண்கலம் வென்ற சென்னை கமாண்டோ படை பெண் காவலர் பாப்பாத்திக்கு ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பரிசும், போல் வால்ட் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சிதமிழ்நாடு சிறப்பு காவல் 1வது அணி முதுநிலை காவலர் எம். முகேஷுக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற சென்னை ஆயுதப்படை பெண்
காவலர் கிருஷ்ணரேகாவுக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், மொத்தம் ரூபாய் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசினை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காவல் துறை உயரதிகாரிகள் டிஜிபி ராமானுஜம், கமிஷனர் திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைகண்ணன், இணை ஆணையர்கள் செந்தாமரை கண்ணன், சங்கர், சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெறும் அண்ணா சாலையில் பொதுமக்கள் இடையூறு ஏற்படா வண்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. எளிய முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுயர பேனர்கள் எதுவும் இல்லை.
முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வர்ணணை செய்த பெண் காவலரின் வர்ணனை சிறப்பாக இருப்பதை கவனித்த முதல்வர் போகும்போது ஓரமாக நின்றிருந்த பெண் காவலர் கோமதியை அழைத்து நன்றி கூறிவிட்டு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் திரிபாதி மின்னணு எந்திரம் எழும்பூரிலுள்ள கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்வது பதிவாகிவிடும். இதன் மூலம் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது
08 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை (வெள்ளிக்கிமை) உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.