எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்ஜ்டவுன், ஜூலை - 4 - இந்தியா- மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இயற்கை ஒத்துழைக்காததால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கவலை தெரிவித்தார். இந்தியா-மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்க்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 11 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் பொறுப்பாக விளையாடியதால் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் 4 ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது.
வி.வி.எஸ்.லக்ஷ்மன் 72 ரன்களுடனும், விராட் கோஹ்லி 26 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் விராட் கோஹ்லி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். கூடுதலாக ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த கோஹ்லி, எட்வர்ட்சின் பந்துவீச்சில் சம்மியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இந்நிலையில் நன்கு விளையாடிவந்த லக்ஷ்மனும் 87 ரன்கள் எடுத்த நிலையில் எட்வர்ட்சின் பந்தில் சம்மியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ஆக இருந்தது. தொடர்ந்து அணித் தலைவர் தோனி களமிறங்கினார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தன் பங்கிற்கு 5 ரன்களை மட்டும் சேர்த்த தோனி, எட்வர்ட்சின் பந்தில் சந்தர்பாலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து வந்த ஹர்பஜன்சிங் அவுட்டாகாமல் 6 ரன்களையும், ரெய்னா ஆட்டமிழக்காமல் 12 ரன்களையும் எடுத்திருந்தநிலையில் இந்திய அணியின் டிக்ளேர் அறிவிப்பை மிகத் துணிச்சலாக செய்தார் தோனி. அப்போது, அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்பிற்கு 269 ஆக இருந்தது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 83 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி வைத்தது. இதையடுத்து மேற்கு இந்திய தீவுகளின் இரண்டாவது இன்னிங்சை பரத்தும், சிம்மன்சும் துவக்கினர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா இந்த இன்னிங்சிலும் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் சிம்மன்சின் விக்கெட்டை பறித்தார். சிம்மன்ஸ் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சர்வானும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 8 ரன்களே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து டேரன் பிராவோ களமிறங்கினார். மே.இ. தீவுகள் அணி 55 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க வீரர் பரத்தை 27 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. அடுத்து சந்தர்பால் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். சந்தர்பால் ரன் எடுக்காவிட்டாலும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தார். இவர் அதிக பந்துகளை வீணாக்கினார். ஆனால் பிராவோ ஓரளவு அடித்து ஆடி ரன்களை சேர்த்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 109 ஆக இருந்தபோது சந்தர்பால் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இவர் 87 பந்துகளை ஏப்பம் விட்டபிறகே இந்த 12 ரன்களை எடுத்தார். ஆனாலும் டி.வி. ரீப்ளேயில் சந்தர்பால் அவுட் இல்லை என்பது தெரியவந்தது. அடுத்து சாமுவேல்ஸ், பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். சாமுவேல்ஸ் 9 ரன்கள் மட்டும் எடுத்து சர்மாவின் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 53.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களாக இருந்தது. அடுத்து களமிறங்கிய மே.இ. தீவுகளின் விக்கெட் கீப்பர் பாவ் மற்றும் பிராவோ ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை மிகவும் சோதித்தது. முன்னணி பந்துவீச்சாளர்கள் எவரும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இந்நிலையில் மழை வேறு குறுக்கிட்டது. அப்போது மேற்கு இந்திய தீவுகள் அணி 181 ரன்களை எடுத்திருந்தது. மழை நின்று ஆட்டம் தொடர்ந்தபோதும் மைதானத்தில் தண்ணீர் ஆங்காங்கே இருந்ததால் அதை துடைக்கும் பணியும் இடையில் நடந்தது. மீண்டும் ஆட்டம் துவங்கியதும் பிராவோ, பாவ் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 201 க்கு உயர்த்தினர். அப்போது அபிமன்யு மிதுன் பந்தில் தோனியால் கேட்ச் பிடிக்கப்பட்ட பிராவோ அவுட்டானார். இவர் எடுத்த ரன்கள் 73. இதையடுத்து வந்த சம்மி வந்தவுடன் இஷாந்த் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து ராம்பால் களமிறங்கினார். ஆனால் அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி அம்பயர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணி 71.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்திருந்தது. இதனால் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இயற்கை இடையூறுகளினால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவியது. மேலும் பிராவோ, பாவ், சந்தர்பால் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கும் இந்தியாவின் தொடர் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தது. தொடரை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் தோனி இயற்கை காரணங்களால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்றார். மேலும் இந்த ரன்களில் டிக்ளேர் செய்த முடிவு தவறான ஒன்று அல்ல என்றும் வெற்றி பெறுவதற்காக தான் வகுத்த வியூகம் இயற்கையால் தட்டிப் பறிக்கப்பட்டது என்றார்.
இதற்கிடையில் இந்திய அணியினர் ஓவர்களை தாமதமாக வீசியதால் தோனிக்கு அவரது சம்பளத்தில் 60 சதவீதமும், மற்ற வீரர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் பிடித்தம் செய்யப்படும் என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.
இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி வருகிற 6 ம் தேதி துவங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப