எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.28 - ஈழத் தமிழர்கள் இன்னல் தீரவும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க கோரியும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக மலர்ந்துள்ளார் என்று அ.தி.மு.க. இலக்கிய அணி புகழாரம் சூட்டியுள்ளது.அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை செயலாளர் நத்தம் கோபு (எ) ரகுராமன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வரவேற்றார். விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கோபால்சாமி நன்றி கூறினார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் தளவாய் சுந்தரம், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், பா.வளர்மதி, பொன்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் மகத்தான திருப்புமுனையாக வரலாறு காணாத வெற்றியை பெறுவதற்கு தியாக வேள்வியாய் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணியின் சார்பில் நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் பணிவோடு சமர்ப்பிக்கிறது.
நான் தான் தமிழ், தமிழ் தான் நான் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்து கொண்டு ஈழத் தமிழர்களை காட்டிக் கொடுத்து, தமிழினத்தை கொன்று குவிக்க காரணமாக இருந்த கருணாநிதியை உலகுக்கு அடையாளம் காட்டி, கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்த ஈழத்தமிழினத்தை கொடியவன் சிங்கள வெறியன் மஹிந்த ராஜபக்ஷேவிடம் காட்டிக் கொடுத்து அதற்கு கைக் கூலியாக தனது குடும்பம் பிழைப்பு நடத்துவதற்கு மத்திய அரசில் பங்கேற்று டெல்லி வாலாக்களின் காலில் விழுந்த தமிழின துரோகி கருணாநிதி தன் கையாலாகாத தனத்தால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கவும், இன வெறியன் சிங்கள ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவும், உலக வல்லரசு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை உலக நல்லரசின் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை செய்ததின் மூலம் உலகத் தமிழர்களின் நலன் காக்கப்பட, தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதின் மூலம் ஜெயலலிதா உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக மலர்ந்து வருகிறார். விரைவில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசை பெறுவார் என்பது சத்தியம். அத்தகையை சிறந்த நிகழ்வை எண்ணி, எண்ணி இலக்கிய அணி பூரிப்படைகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றும் அனைத்து நலத்திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி குறித்த அனைத்து திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ளாட்சி மன்றங்கள் பெரும்பங்கு வகிக்கும். எனவே உள்ளாட்சி தேர்தல்களிலும் 100 சதவீத வெற்றி பெற இன்று முதல் அ.தி.மு.க. இலக்கிய அணியின் சார்பாக ஆயுத்த பணிகளை தொடங்கி, கட்சி மகத்தான வெற்றியை பெற்று வெற்றிக் கனியை முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பது என்று சபதம் ஏற்கிறது.
அ.தி.மு.க. வெற்றி பெற தமிழக மக்களின் துயர் துடைக்க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழை, எளிய மக்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தியும் காட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணி நன்றியை காணிக்கையாக்குகிறது.
அதேபோல் கிராம மக்களுக்கு இலவச ஆடுகள், கறவை மாடுகள், முதியோர் உதவித் தொகை உயர்வு, இலவச சைக்கிள், லேப்- டாப், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஏழை பெண்கள் மணமுடிக்க திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கம் என பலவேறு திட்டங்களை செயல்படுத்தி தினசரி 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக உழைத்து ஏழைக்கு தங்கமாய் எதிரிக்கு சிங்கமாய் முதல்வர் திகழ்வதை எண்ணி இலக்கிய அணி இதயபூர்வமான நன்றியினை காணிக்கையாக்குகிறது.
கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அவரது வாரிசுகள் தி.மு.க.வின் அடாவடி கட்டப் பஞ்சாயத்து கும்பல்களின் மிரட்டல் உருட்டல்களினால் தனது சொத்துக்களை நிலங்களை இழந்து ஆட்சி அதிகாரங்களுக்கு பயந்து ஒதுங்கி நின்ற ஏழை எளிய மக்கள் மற்றும் நில உரிமையாளர்களின் இழந்த சொத்தை மீட்டுத்தர காவல்துறையில் தனிப்பிரிவை துவங்கி நடவடிக்கை எடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணியினர் பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்த இந்த 2 மாத காலத்தில் முதல்வர் ஜெயலலிதா அரசு நிகழ்த்தியுள்ள வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளையும், வருகிற பட்ஜெட் கூட்ட தொடரில் அ.தி.மு.க. அரசு அறிவித்து செயல்படுத்த உள்ள மக்கள் நலத்திட்டங்கள் சாதனைகளை அடிதட்டு மக்களுக்கு கொண்டு செல்கிற விதமாக தெருமுனை பிரச்சார கூட்டங்கள், ஓரங்க நாடகங்கள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இலக்கிய அணி தீர்மானம் செய்கிறது.
அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பாக மாவட்ட நிர்வாகிகளை அடையாளம் கண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்து வெற்றி பெற செய்து அழகு பார்க்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணி தனது இதயபூர்வமான நன்றியினை காணிக்கையாக்குகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.