முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரிச்சியூர் செல்வம் மீது புகார் கொடுத்தவரை மிரட்டியவர் கைது

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.2 - மதுரை வரிச்சியூர் செல்வம் மீது புகார் கொடுத்தவரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் நீதிராஜ், லாரி அதிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான லாரி கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு கருப்பாயூரணியில் இருந்து பூவந்திக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை சுப்பையா என்பவர் ஓட்டிசென்றார். அப்போது லாரி உறங்கான்பட்டி அருகே வந்த போது வரிச்சியூர் செல்வத்தின் மகன் நந்தகுமார் லாரியை வழிமறித்து டிரைவரிடம் இருந்த ரூ. 37 ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டான். இது குறித்து நீதிராஜ் கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வரிச்சியூர் செல்வம், அவரது மகன் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரிச்சியூர் செல்வத்தின் ஆதரவாளரும், சிவகங்கையை சேர்ந்த கல்குவாரி அதிபருமான ராஜ்குமார், நீதிராஜை சந்தித்து வரிச்சியூர் செல்வத்தின் மகன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு கூறி உள்ளார். மேலும் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நீதிராஜ் கொடுத்த புகாரின்பேரில் கல்குவாரி அதிபர் ராஜ்குமாரை கருப்பாயூரணி போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்