எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், ஆக.12 - மதுரை எஸ்.பி. அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் திருமங்கலம் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தென்மாவட்டங்களை கலக்கிய சீட்டாட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.22லட்சம், 75.5 பவுன் தங்க நகைகள், பொலீரோ ஜீப், 10லட்சம் மதிப்புடைய வைப்புத்தொகை ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெட்டுச்சீட்டு, உள்ளே வெளியே என பல்வேறு பெயர்களில் சீட்டு விளையாட்டினை அறிமுகம் செய்து விருதுநகர் பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தங்களிடமிருந்து பல லட்சம் ரூபாய், நகைகள் மற்றும் வாகனத்தை மோசடி செய்து அபகரித்துவிட்டதாக மதுரை எஸ்.பி. அஸ்ராகர்க்கிடம் சிலர் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்.பி.அஸ்ரா கர்க் ஆலோசனையின் பேரில் மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த பாலு(எ) பாலமுருகன் தன்னிடமிருந்து 6.5 பவுன் தங்கநகைகளை சீட்டாட்ட கும்பலொன்று ஏமாற்றி பறித்து சென்று விட்டதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இதேபோல் காரைக்குடியைச் சேர்ந்த தட்சிணைமூர்த்தி என்பவர் தன்னுடைய பொலீரோ காரை சீட்டாட்ட கும்பல் மோசடி செய்து எடுத்து சென்றுவிட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் மதுரை செல்லூரைச் சேர்ந்த பொன்னாங்கத்தேவர் மகன் அஞ்சானை(39) என்பவர் தனது 15 பவுன்நகைகளைகளை சீட்டாட்ட கும்பல் பறித்து சென்று விட்டதாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார்களை தொடர்ந்து போலீசார் முறைப்படி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அஸ்ராகர்க் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் மேற்பார்வையில் திருமங்கலம் டவுன் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சீட்டாட்ட கும்பலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி புகார் கொடுத்த அழைப்பினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட விருதுநகர் மோசடி கும்பலைச்சேர்ந்த 3 பேர் திருமங்கலம் மாஸ்மகால் பகுதிக்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் மடக்கி பிடித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். சீட்டாட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேர் பிடிபட்ட தகவலறிந்த எஸ்.பி.அஸ்ராகர்க் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் ஆகியோர் விரைந்து வந்து 3பேரிடம் துருவி,துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிடிபட்டவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், ஓட்டல் அதிபர் ராஜா, மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் விருதுநகர் அருகேயுள்ள பாலவநத்தத்தை சேர்ந்த அண்டல்(எ) ஜெயச்சந்திரன் வீட்டில் தாங்கள் மோசடி செய்த பணம், நகை மற்றும் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாலை நேரத்தில் பாலவநத்தத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அண்டல்(எ) ஜெயச்சந்திரன் வீட்டை சுற்றி வளைத்து அவனை மடக்கிபிடித்து வீட்டை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22லட்சம் ரூபாய், 75.5 பவுன் தங்கநகைகள், 10லட்சம் மதிப்புடைய வங்கி வைப்பு பத்திரங்கள், பொலீரோ ஜீப் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து 3 காவல்நிலையங்களிலும் பதிவான வழக்குகளின் பேரில் முரளிக்கிருஷ்ணன், ஓட்டல் அதிபர் ராஜா, மோகன்ராஜ், அண்டல்(எ)ஜெயச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் முறைப்படி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பிடிபட்ட சீட்டாட்ட மோசடி கும்பல் தங்களது தங்களது வாடிக்கையாளர்களை செல்போனிலே தொடர்பு கொண்டு அழைப்பதும், ஒன்றாக கூடியவுடன் மறைவான காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து சீட்டாட்டம் நடத்தி மோசடி செய்து வந்த தகவலும் வெளியானது. மொத்தத்தில் தென்மாவட்டங்களில் மோசடி சீட்டாட்டத்தின் மூலம் கலக்கி வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொலீரோ ஜீப்பை பறிமுதல் செய்த திருமங்கலம் இன்ஸ்பெக்டர் வேணுகோபால், எஸ்.ஐ. சரவணன், ஏட்டுக்கள் முருகேசன், தங்கராஜ், செல்லப்பாண்டி, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் ஆகியோரை மதுரை எஸ்.பி. அஸ்ராகர்க் பாராட்டினார்.
பாக்ஸ் செய்தி
சீட்டாட்ட மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட முரளிகிருஷ்ணன் தன்னிடமுள்ள அசாத்தியமான திறமையால் உடன் சீட்டு விளையாடுபவர்களை ஜெயிக்க விடாமல் எப்பொழுதும் தானே ஜெயிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். இதற்காக வெட்டுச்சீட்டு, மூன்று சீட்டு, உள்ளே வெளியே, ஜெயிக்குது-தோக்குது எனப்படும் உடனடி முடிவு காணும் சீட்டாட்ட முறைகளையே முரளிக்கிருஷ்ணன் கையாண்டு மோசடி மூலம் பணம் சேர்த்துள்ளான். அதேபோல் தோல்வியடைந்த சீட்டாட்டத்திலிருந்து வெளியேறுபவர்களை செல்லவிடாமல் அவர்களது நகைகள் மற்றும் இதரபொருட்களை அடகாக பெற்று பணம் கொடுத்து, அந்த பணத்தையும் சீட்டாடி வெற்றி கொள்வது முரளிக்கிருஷ்ணனின் கைவந்த கலையாகும். பல்வேறு மோசடிகளை செய்து சீட்டாட்டத்தில் பண் குவித்த இந்த கும்பல் போலீசில் சிக்கியதை தொடர்ந்து பல்வேறு புகார்கள், பல்வேறு காவல்நிலையங்களில் இந்த கும்பல் நீது குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி