எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஆக.- 16 - தமிழக அரசின் மக்கள் நலதிட்டங்களான ஆடுகள்- கறவைமாடுகள் வழங்கும் திட்டத்தில் பெண்களே முக்கிய பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு ,அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திரதினவிழாவில் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது: நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம், மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல முன்னோடித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறேன். அந்த வகையில், என்னுடைய சிந்தனையில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் ஆகும். இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் சிசுவதை நடந்து கொண்டிருந்தாலும், எனது தலைமையிலான தமிழக அரசு மட்டுமே முதன் முதலாக சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றவும் உறுதி nullண்டு, 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் என்ற மகத்தான திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. 2001 ஆம் ஆண்டு, நான் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பெண் சிசுக்கொலை நடைமுறையில் இருந்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கவனிக்கத் தக்க வகையில் இறங்கு முகமாக உள்ளதால், இந்நேர்வில் அரசின் தனிக் கவனம் தேவைப்படுவதை உணர்ந்து, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்க எனது அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்துள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்னும் ஒரு முன்னோடியான திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அந்தப் பெண் குழந்தையின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகை 22,200 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாகவும்; இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அந்தப் பெண் குழந்தைகளின் பெயரில் வைக்கப்படும் வைப்புத் தொகை தலா 15,200 ரூபாயில் இருந்து தலா 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, தங்கத்தின் விலை விண்ணை எட்டும் அளவு ஏறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகளிரின் நலன் காக்கும் வகையில், பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன் பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்கக் காசு வழங்கவும்; கல்வியறிவு பெற்ற மகளிரை ஊக்குவிக்கும் வகையில், அந்தப் பயனாளிகள் பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருப்பின், அவர்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கக் காசுடன், திருமண உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ள காரணத்தால் தான், ஆடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் கீழும், பெண்களையே பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கவும், மகளிரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
உண்மையான மக்கள் அரசு, சமூக நீnullதியை நிலை நாட்ட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதில் எனது தலைமையிலான அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காக்கும் வகையில் 11.7.2011 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு; மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு; ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு; பழங்குடியினருக்கு 1 விழுக்காடு; ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்ந்து கடைபிடிக்கப்பட இந்த அரசாணை வகை செய்துள்ளதன் மூலம் சமூக நீnullதி நிலை நாட்டப்பட்டுள்ளது.
மேலும், வளமான பிரிவினரை நீnullக்கம் செய்யாமல் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட இந்த அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், வாழ்வில் முன்னேற்றம் பெற்று அதன் மூலம் சமூக, பொருளாதார மேம்பாட்டினை அடையும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கிப் பயிலும் விடுதிகள், அவர்கள் செம்மையாகக் கற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 1080 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில், 83 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது. அதே போல், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ, மாணவியர் தங்கும் 148 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட இந்த ஆண்டு 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.