எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.19 - எந்த திட்டமாக இருந்தாலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து விரிவாக ஆய்வு செய்து அதன் பின்னர் அறிவிப்புக்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். ஆகவே 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தபடி மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீது அளித்த பதிலுரை வருமாறு:
தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டப்படி, 1.தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 2.தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம், என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
2006-ல் ஜெயலலிதா ஆட்சியில் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,031 மெகாவாட். 2001 முதல் 2006 முடிய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் 2047 மெகாவாட்ஸ். அப்போது தமிழகம் மின்சார மிகை உற்பத்தி மாநிலமாக திகழ்ந்தது. அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்ப்பட்டது. தற்போதைய மின் உற்பத்தி நிலை 10,237 மெகாவாட்.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதலாக மின் உற்பத்தி திறன் கிடைத்தது 206 மெகாவாட் மட்டுமே. தேவைக்கேற்ப கூடுதலாக உற்பத்தி திறன் கிடைக்க வழிவகை செய்யவில்லை. 10,237 மெகாவாட்டில் மத்திய தொகுப்பில் கிடைப்பது 2,000 மெகாவாட் மட்டுமே.
தனியார் மின் உற்பத்தியில் 600 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தற்போது 8000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக மின் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,500 மெகாவாட் தேவைப்படுகிறது. பற்றாக்குறை 2500 முதல் 3500 மெகாவாட் ஆகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் மின் தேவை ஆண்டொன்றுக்கு 8 சதவீதம் அளவில் அதிகரித்தது. ஆனால் இவ்வளர்ச்சியை ஈடுகட்டும் அளவிற்கு மின் உற்பத்தி திட்டங்கள் இல்லை. மாநிலத்தின் அதிகரித்து வந்த மின் தேவையை பூர்த்தி செய்ய குறிக்கோளுடன் மிகப்பெரிய அளவிலான புதிய மின் திட்டங்களை மேற்கொள்ளவும், இதுவரை தொடங்கப்படாத மின் திட்டங்களை செயல்படுத்தவும், மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரைவாக நிறைவு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின் தேவை, மின் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியினை சரிசெய்யவும், இந்த இடைவெளியை சரிசெய்து மின்சார பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை 3 மாதங்களுக்குள் நான்கு முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, இந்த துறைக்கு நல்லதொரு வழிகாட்டு விதிமுறைகலையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
மின்வெட்டை படிப்படியாக குறைப்பதற்கு முதற்கட்டமாக உடனடி தேவையாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 90 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
1.7.11 முதல் நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு (சென்னை தவிர) 3 மணிநேரம் மின் தடை 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 8.8.11 முதல் செப்.2011 வரை காற்றாலை உபரி மின்சாரத்தை பயன்படுத்தும் பொருட்டு இசைவு தெரிவிக்கும் உயர் அழுத்த மின் பயனீட்டாளர்கலுக்கு இரவு 10.00 மணிமுதல் மறுநாள் காலை 5.00 மணிவரை 20 விழுக்காடு மின் வெட்டு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும்.
9.1.10 முதல் மூடப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையம் -2 (92.2 மெகாவாட்) மீண்டும் 17.5.11 அன்று இயக்கிவைக்கப்பட்டது. 17.7.10 முதல் மூடப்பட்டிருந்த குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தில் (101 மெகாவாட்) பாரத மிகுமின் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட புதிய எரிவாயு நிலைப்பான் மாற்றப்பட்டு 28.5.11-ல் மீண்டும் இயக்கிவைக்கப்பட்டது.
காரே பெல்மா செக்டர்-11 நிலக்கரி பகுதியிலிருந்து நிலக்கரியை எடுப்பதற்கும் மற்றும் சுரங்க வளாக அனல் மின் நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. 400 கி.வோட் சுங்குவார்சத்திரம் துணை மின்நிலையம் அதனை சார்ந்த மின்னூட்டியையும் ரூ.227.35 கோடி செலவில் 16.8.11 அன்று ஜெயலலிதா திருக்கரத்தால் இயக்கி வைத்துள்ளார்.
178 மெகாவாட் அளவிற்கு புதிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. மே 2011-லிருந்து எண்ணூர் அனல் மின்நிலையம் தவிர்த்து அனைத்து அனல் மின் நிலையங்களின் செயலாக்கம், கணிசமாக அதிகரிக்கப்பட்டு மின் சுமை காரணி 90 விழுக்காட்டிற்கு மேல் செயல்பட்டு வருகிறது. 2 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின் உற்பத்தி கூட்டப்பட்டுள்ளது. 53.25 கி.மீ நீளமுள்ள 230 கி.வோ. மின் சுற்று பாதை ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பல்லடம் வரை பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளது. 400 கி.வோ. சுங்குவார்சத்திரம் துணை மின்நிலையத்தையும் 400 கி.வோ. புதுச்சேரி - திருபெரும்புதூர் மின்னூட்டியையும் இணைக்கும் 16.28 சுற்று கி.மீ நீளமுள்ள இணைப்பு பாதை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. தாம்பரம் பகுதி சுற்று வட்டாரத்திலுள்ள தாழ்வழுத்த மின் பகிர்மான குறைபாடுகளை சீர்செய்வதற்கும், சென்னை தெற்கு மண்டலத்தில் 2 புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையங்களில் ஒன்று கோவிலம்பாக்கத்தில் ரூ.21.22 கோடி செலவிலும், மற்றொன்று இராஜகீழ்ப்பாக்கத்தில் ரூ.12.89 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்கள். பவானி கட்டளை தடுப்பணை-2 (2 15 மெகாவாட்) 400 கோடி ரூபாய் செலவில், புனல் மின் நிலையத்தின் அலகு-1 (15 மெகாவாட்) வரும் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் காரணமாக சென்னை தவிர மற்ற பகுதிகளில் 3 மணிநேரமாக இருந்த மின்வெட்டு 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த ஆட்சியில் கலவரமாக இருந்த நிலை மாறி தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது, மின்நிலவரம்.
மின்வெட்டை முழுமையாக நீக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வருமாறு:
ஆகஸ்ட் 2012 முழுமையாக மின்வெட்டு ரத்து செய்யப்படும். எந்த திட்டமாக இருந்தாலும் சாதக பாதகங்களை விரிவாக ஆய்வு செய்து அதன் பின்பு அறிவிப்புகள் வெளியிடுபவர் ஜெயலலிதா. அறிவித்தபடி மின்வெட்டு பிரச்சனை நிச்சயம் தீர்க்கப்படும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமாக திகழ்பவர் ஜெயலலிதா. 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாத்ததிற்குள் தமிழகத்திற்கு மின்வெட்டு முழுமையாக அகற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கேற்ப சில வழிமுறைகளை வகுத்து கொடுத்து இருக்கிறார். நடைமுறையிலுள்ள மின் திட்டங்களை இயக்கத்திற்கு கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநில கட்டமைப்பு 4640 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டு இறுதிக்குள் மாநில கட்டமைப்பு 4,640 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் வடசென்னை நிலை-2(1,200 மெகாவாட்), மேட்டூர் நிலை -3(600 மெகாவாட்), தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்-தேசிய அனல்மின் கழகம் கூட்டு முயற்சி(1,041 மெகாவாட்), தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்-நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கூட்டு முயற்சி-தூத்துக்குடி(387 மெகாவாட்), சிறிய மற்றும் மிகச்சிறிய புனல்மின் திட்டங்கள்(7 திட்டங்கள்-90 மெகாவாட்), கூடங்குளம்(925 மெகாவாட்), பி.எப்.பி.ஆர்.கல்பாக்கம்(167 மெகாவாட்), நெய்வலி டி.எஸ்.2 (230 மெகாவாட்).
அடுத்ததாக தொலைநோக்கு பார்வையுடன் 5,100 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீண்ட காலத்திட்டங்களாகும்.
வடசென்னை நிலை-3 (800 மெகாவாட்- எதிர்பார்க்கும் காலம் 2015ம் ஆண்டு), வடசென்னை நிலை-4 (1,600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு), உடன்குடி (1,600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு), எண்ணூர் இணைப்பு(600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2015ம் ஆண்டு), குந்தா நீரேற்று புனல் மின் நிலையம்(500 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு)
குந்தா நிரேற்று மின் நிலையம் தமிழக மின்சார பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை மத்திய அரசின் நதிநீர் ஆணையம் குந்தா திட்டம் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் உண்மையில் இந்த குந்தாநதி காவிரி நதியின் கிளை நதியின் கிளை நதி. இதிலே மற்ற மாநிலங்கலுக்கு சம்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மூன்று மாநிலங்களுக்கும் பலமுறை கோரியும் கிடைக்கவில்லை. புதுவை மாநிலம் மட்டுமே ஒப்பந்தம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்கள் அனுமதி மறுவிட்டன. இது மிகவும் வருத்ததற்குரிய விஷயம் என்னவென்றால் காவிரி நீர் சம்பந்தப்பட்ட மாநிலங்களை எந்த வகையிலும் பாதிக்காத கூடுதல் தண்ணீர் தேவைகள் கிடைக்கவில்லை. காவிரி பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்வதும் மாநில அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்வதும் மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி பெற வேண்டிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து தொடர் முயற்சிகளை மேற்கொள்வார் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.