எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.27 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 196 புதிய பேருந்துகளை வழங்கி 106 புதிய வழித் தடங்களைத் துவக்கி வைத்தார்.அப்போது விபத்தில்லாமல் பணியாற்றுங்கள் என்று டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களான, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 பேருந்துகள், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 23 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 13 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகள் என மொத்தம் 196 புதிய பேருந்துகளை வழங்கினார்.
பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளுக்குப் புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் புதிய வழித் தடங்கள் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்திருந்தனர்.
அம்மனுக்களை பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கைகளை ஏற்று பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 வழித்தடங்கள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 23 வழித்தடங்கள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 வழித்தடங்கள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 6 வழித்தடங்கள் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 11 வழித்தடங்கள் என மொத்தம் 106 புதிய வழித்தடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏழு புதிய பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு பேருந்தின் சாவிகளை வழங்கி வாழ்த்தி, ஓட்டுநர்கள் தங்களது பணியினை பாதுகாப்போடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், தமிழக முதலமைச்சர் ஏழு புதிய பேருந்துகளைக் கொடி அசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களின் சார்பில் புதிதாக 196 பேருந்துகளை துவக்கி வைத்ததில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பேருந்துகளை ஒட்டும் ஒட்டுநர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியினை செய்ய வேண்டும். தங்களுக்கும் அவர்களை நம்பி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் எந்தவிதமான ஆபத்துமின்றி நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொண்டு உங்கள் அனைவருக்கும் எனது இதயnullர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 196 புதிய பேருந்துகளில், 106 புதிய பேருந்துகள் இன்று புதிதாக தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட 106 வழித்தடங்களிலும், மீதமுள்ள 90 புதிய பேருந்துகள் ஏற்கெனவே உள்ள வழித்தடங்களிலும் இயக்கப்படவுள்ளன. இவ்விழாவில், போக்குவரத்துத்துறைச் செயலாளர் முகமது நசிமுதீன் வரவேற்புரையாற்றினார். சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் எஸ். பதி நன்றி தெரிவிக்கையில், பல்லாண்டு காலமாக எந்தவொரு முதலமைச்சரும் பணிமனைக்கு நேரில் வராத நிலையில் பணிமனைக்கு நேரில் வருகை தந்து 196 புதிய பேருந்துகளை வழங்கியும் 106 புதிய வழித்தடங்களை துவக்கியும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.