எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 4 - அத்வானியை கொல்ல வெடிகுண்டு வைத்ததற்கு மூளையாக செயல்பட்ட பக்ரூதீனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் செல்போன் சிம்கார்டு வாங்கி கொடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 27-ந்தேதி 2-ம் கட்ட யாத்திரையை மதுரையில் இருந்து அத்வானி தொடங்கினார். அவர் யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக செயலிழக்க செய்யப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வெடிகுண்டு சம்பவம் எல்.கே.அத்வானியை குறி வைத்து நடத்தப்பட்டது என்று தெரியவந்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு போலீசார் சதிகாரர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், சிறப்பு புலனாய்வு டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சதிகாரர்கள் தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி இமாம்அலியின் கூட்டாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலக்கப்பட்டு மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்துல்லா (26), சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் திருமங்கலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீnullதிபதி அனுமதித்ததையடுத்து அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல்வேறு தகவல்களை 2 பேரும் தெரிவித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் இமாம்அலியின் நெருங்கிய கூட்டாளியான மதுரை நெல்பேட்டையை சேர்ந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் உள்ளிட்ட 3 பேர் வெளிமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்து சென்றுள்ளனர். தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கடந்த 2002-ல் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் அல்உம்மா தீவிரவாதிகள் இமாம்அலி, ஹைதர்அலி ஆகியோரை போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி மீட்டு சென்ற சம்பவத்தில் ஈடுபட்டவர். இவரது தந்தை சிக்கந்தர். போலீஸ் எஸ்.ஐ.யாக இருந்தவர். இதனால் பக்ருதீன் பெயரிலும் போலீஸ் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். பெங்களூரில் இமாம்அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இப்ராகிம் என்பவரது மைத்துனர்தான் போலீஸ் பக்ருதீன். இவர் மீது மதுரை, வேலூர் ஆகிய பகுதிகளில் 22 வழக்குகள் உள்ளன. இமாம்அலியை மீட்டு சென்ற வழக்கில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானார். மதுரை மாட்டுத்தாவணியில் டாஸ்மாக் மதுக்கடையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் 2 அடிதடி வழக்குகளிலும் போலீஸ் பக்ருதீன் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ் பக்ருதீன், எல்.கே.அத்வானியை கொல்ல சதி திட்டம் தீட்டி செயல்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
போலீஸ் பக்ருதீனை பிடித்தால்தான் பைப் வெடிகுண்டு தொடர்பாக முழு தகவல்களையும் பெறமுடியும் என்பதால் தனிப்படையினர் போலீஸ் பக்ருதீனை குறிவைத்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் மற்றொரு நபரான மாலிக் மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டவர். அப்போது 17 வயதான மாலிக் மைனர் என்பதால் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் nullசாரி கங்காதரன் கொலை வழக்கிலும் இவர் தேடப்பட்டு வருகிறார். போலீஸ் பக்ருதீன், மாலிக் ஆகியோர் இந்து முன்னணி பிரமுகர் ராஜகோபாலன் கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களது குற்றப்பின்னணி குறித்து மேலும் விரிவாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களது வழக்குகளை விசாரித்த தற்போது வெளியூர்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
மேலும் வெடிகுண்டு வைத்தவர்களுக்கு உதவிய மற்றொரு நபரையும் போலீசார் மாமல்லபுரத்தில் உள்ள லாட்ஜில் வைத்து கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் பிரியாணி கடை நடத்தி வரும் அல்தாப் என்பவர் ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும், மேலும் ஒரு வழக்கிலும் கைதானவர், பின்பு திருந்தி பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு வைத்து கைதான அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்மத் ஆகியோரின் செல்போன் சிம்கார்டுகளை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் அந்த செல்போனும், சிம்கார்டும் திருவல்லிக்கேணியில் உள்ள அல்தாப் பெயரில் வாங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உத்தரவின் பேரில் அல்தாப்பை பிடிக்க சிறப்பு புலனாய்வு படை முடுக்கி விடப்பட்டது. விசாரணையில் அல்தாப் குண்டு பிடிபட்டதிலிருந்து வீட்டிற்கே வருவதில்லை என தெரிய வந்துள்ளது. விசாரணையில் அல்தாப் மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அல்தாப்பை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அல்தாப் விசாரணைக்கு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு
02 May 2024பெகோட்டா : இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார். ",
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகி விட்டது : அதிபர் ஜோ பைடன் கருத்து
02 May 2024நியூயார்க் : சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.